Friday, May 30, 2014

சம்மாந்துறை நிரந்தர நீதவான் நீதிமன்றக் கட்டிடத்தொகுதி திறப்பு விழா

சம்மாந்துறை நிரந்தர நீதவான் நீதிமன்றக்

கட்டிடத்தொகுதி திறப்பு விழா

இன்று காலை (30.05.2014) சம்மாந்துறையில் இடம்பெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, சம்மாந்துறை நிரந்தர நீதவான் நீதிமன்றக்கட்டிடத்தொகுதியினை, நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹகீமின் அழைப்பின் பேரில் நீதியரசர் மொஹான் பீரிஸ் கலந்துகொண்டு வைபவ ரீதியாகத்  திறந்துவைத்தார்.
இதன்போது கல்முனை உயர் நீதிமன்றத்துக்கான ரூபா 500 மில்லியன் பெறுமதியான சகல வசதிகளையும் கொண்ட அதி நவீன உயர்நீதிமன்றக் கட்டிடத்தொகுதியை பெற்றுத் தருவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொண்டிருப்பதாகவும் நீதியமைச்சர் தெரிவித்தார்.

ஏற்கனவே சம்மந்துறைக்கான சுற்றுலா நீதிமன்றத்துக்கான கட்டிடத்தையும், குவாஷி நீதிமன்றத்துக்கான இலங்கையின் முதலாவது கட்டிடத்தையும் நீதியமைச்சரின் பணிப்பின் பேரில் வழங்கியிருந்தமையும்  இங்கு குறிப்பிடத்தக்கது.











No comments:

Post a Comment