Friday, May 30, 2014

கல்முனை அல்-மிஸ்பா மஹா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற நிகழ்வுகள்.

கல்முனை அல்-மிஸ்பா மஹா வித்தியாலயத்தில்

சிறப்பாக இடம்பெற்ற நிகழ்வுகள்.

கல்முனை அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயத்தில் ஆங்கில கற்கை நிலையம் திறந்து வைத்தல், மாணவர் தலைவர்கள் அறிமுக நிகழ்வு மற்றும் மணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டு வழாவும் இன்று30 ஆம் திகதி இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் .எம்.எம். பரீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வரும், ஶ்ரீ..மு.கா. பிரதி செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஆதம்பாவா முஹம்மது பறக்கத்துள்ளா பாடசாலையின் உதவி அதிபர் எம்.எச்.எம்.அன்சார், வலைய அதிபர்கள் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்லீடர்ஸ்சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன், மாணவ தலைவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு சின்னமும் சூடப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த கல்முனை முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு நினைவு வாழ்த்து மடல் வழங்கப்பட்டதோடு பொன்னாடையும்  போர்த்தி கௌரவிக்கப்பட்டது.






























No comments:

Post a Comment