Monday, June 30, 2014

தீவிரவாதிகள் ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகள் இஸ்லாமிய நாடாக அறிவிப்பு நாட்டின் தலைவரையும் நியமித்தனர்


போராளிகள் ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகள்
இஸ்லாமிய நாடாக அறிவிப்பு
நாட்டின் தலைவரையும் நியமித்தனர்

ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகளுக்கு போராளிகள் இஸ்லாமிய நாடு என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த நாட்டுக்கு தலைவராக அபுபக்கீர் அல்-பகாதி என்பவரையும் அறிவித்தனர்.
ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக .எஸ்..எஸ். என்ற அமைப்பின் போராளிகள் சண்டையிட்டு வருகிறார்கள். அந்நாட்டின் மொசூல், திக்ரித், கர்பாலா உள்பட பல்வேறு நகரங்களை கைப்பற்றிய அவர்கள் தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வந்தனர்.
இந்த நிலையில் ஈராக் பாராளுமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. எனவே போராளிகள் பாக்தாத்தை நெருங்குவதற்குள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும்படியும் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய நகரங்களை மீட்கும்படியும் பிரதமர் நூர் அல்-மாலிகி iராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது
தூக்கிலிடப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் ஹுஸைனின் பிறந்த ஊரான திக்ரித் நகரை மீண்டும் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றும் முயற்சியாக அந்த நகருக்கு போர்க்கப்பல்கள் மூலம் இராணுவம் கூடுதல் படைகளை அனுப்பியது. இந்த நிலையில், திக்ரித் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முகாமிட்டு இருந்த தீவிரவாதிகளை முற்றுகையிட்டு இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், தீவிரவாதிகள் 70 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் திக்ரித் பல்கலைக்கழகத்தை இராணுவத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதன் உச்சியில் ஈராக்கின் தேசிய கொடியையும் ஏற்றினர்.இது தவிர வடக்கு பகுதியில் உள்ள ஜர்ப் அல்-சாகர் நகரில் இராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 72 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, .எஸ்..எஸ். சன்னி போராள்கள் தாங்கள் ஏற்கனவே சிரியா நாட்டில் கைப்பற்றிய பகுதிகளையும், ஈராக்கின் வடக்கு எல்லையோரம் கைப்பற்றிய பகுதிகளையும் ஒன்றாக இணைத்து இஸ்லாமிய நாடு என்ற ஒரு நாட்டை உருவாக்கி உள்ளனர். இதன் தலைவராக அபு பக்கீர் அல்பகாதி என்பவரையும் நியமித்து உள்ளனர். அவரது புகைப்படங்களையும் சமூக வளைத்தளங்களில் இன்று வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment