Tuesday, July 1, 2014

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1000 ரூபா வரை விற்பனை!


மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு
பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1000 ரூபா வரை விற்பனை!

நாடு பூராவும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதனால், மக்கள்  அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் 
மேல்,  வடக்கு ,கிழக்கு, மத்திய மாகாணங்கள்  உள்ளிட்ட அநேகமான பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஒரு சில மரக்கறி  வகைகளின் விலைகள் தற்போது பன் மடங்கு அதிகரித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
கொழும்பில்உள்ள சந்தைகளில்  ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விலை 1000 ரூபா வரை அதிகரித்துள்ளதகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்று வடமேல் மாகாணத்திலுள்ள சந்தைகளிலும் மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன என்றும் அறிவிக்கப்படுகின்றது.
 மலையகத்திலுள்ள சந்தைகளிலும் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றின் விலைகளும்  அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள சந்தைகளில் இஞ்சி ஒரு கிலோகிராம் 1000 ரூபா வரை அதிகரித்து விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



No comments:

Post a Comment