Tuesday, July 1, 2014

சென்னை 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 நாட்களுக்கு பின் 3 பேர் உயிருடன் மீட்பு



சென்னை 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில்
4 நாட்களுக்கு பின் 3 பேர் உயிருடன் மீட்பு

சென்னை அருகே மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 நாட்களுக்கு பின் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
சனிக்கிழமை நடந்த இந்த துயரச் சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 4வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று காலை தமிழகத்தை சேர்ந்த செந்தில், ஆந்திராவை சேர்ந்த மகேஷ், அனுசூரி ஆகிய 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் சேர்த்து இதுவரை 26 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 3 நாட்கள் இடிபாடுகளில் சிக்கி தவித்த அவர்களை மீட்டப்போது அங்கிருந்தவர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்த மகிழ்ச்சிக்கிடையே இன்று மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணான ஜெயமாலா என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே கட்டிட இடிபாடுகளுக்கு இடையே மேலும் சிலர் அழுகை குரல் கேட்டதாக உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நவீன கருவிகளை கொண்டு இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரம் அடைந்துள்ளது

No comments:

Post a Comment