Thursday, July 31, 2014

இன்று சனிக்கிழமை இடம்பெறும் கல்முனை சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா – 2014 முன்னாள் அமைச்சர் மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்கிறார்


கல்முனை சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா – 2014
முன்னாள் அமைச்சர் மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்கிறார்

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் நிழல் கல்வி பிரதியமைச்சருமான, தீனத் பவுண்டேசனின் சிரேஷ்ட உறுப்பினருமான சகோ. .எம். முஹம்மட் முஜீபின் முயற்சியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும், .பொ.. (சா.) பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும், .பொ. (.) பரீட்சையில் சித்தியெய்தி பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வொன்று ஏற்பாடாகியுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் .ஆர்மன்சூர்,கலந்து கொள்கின்றார் கௌரவ அதிதியாக திகாமடுல்ல  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான எச்.எம்.எம்ஹரீஸ்விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கல்முனை மாநகர முதல்வர் எம்நிஸாம் காரியப்பர் கல்முனை மாநகர சபை உறுப்பினர் .எம்பறக்கத்துள்ளாஹ்  ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிரதேச செயலாளர்வலயக்கல்வி பணிப்பாளர்அதிபர்கள்பள்ளிவாசல் தலைவர்கள்விரிவுரையாளர்கள்ஆசிரியர்கள்கல்விமான்கள்உலமாக்கள்புத்திஜீவிகள் மற்றும் பிரமுகர்கள் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இன்று 2014.08.02 சனிக்கிழமை பி..4.00 மணிக்குகல்முனை அல் - பஹ்றியா மஹா வித்தியாலய கூட்ட மண்டபத்தில்  இந்நிகழ்வு இடம்பெறும்.



No comments:

Post a Comment