Thursday, July 31, 2014

இந்திய மராட்டிய மாநிலம் புனே நிலச்சரிவு; மண்ணில் புதைந்து கிடந்த கைக்குழந்தை – தாய் மீட்பு


இந்திய மராட்டிய மாநிலம் புனே நிலச்சரிவு;

மண்ணில் புதைந்து கிடந்த கைக்குழந்தை தாய் மீட்பு

புனே நிலச்சரிவு மீட்பு பணியின் போது அதிர்ஷ்டவசமாக தாயும், அவரது 3 மாத கைக்குழந்தையும் மீட்கப்பட்டனர்.
.நிலச்சரிவு மீட்பு பணியின் போது அதிர்ஷ்டவசமாக தாயும், அவரது 3 மாத கைக்குழந்தையும் மீட்கப்பட்டனர். அந்த தாயின் பெயர் பிரமிளா. இவரது 3 மாத கைக்குழந்தை ருத்ரா. சேறும், சகதியுமாக கிடந்த மண் குவியலில் இருந்து அந்த கைக்குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதை அறிந்த மீட்பு படையினர் அந்த இடத்தில் கவனமாக தோண்டினர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பிரமிளாவையும், அவரது 3 மாத கைக்குழந்தையும் பத்திரமாக மீட்டனர். தாயும், குழந்தையும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வருகிறார்கள்.
 சிகிச்சை பெற்று வரும் பிரமிளா கூறுகையில், ‘‘நிலச்சரிவு ஏற்பட்டபோது எனது வீட்டில் பாத்திரங்கள் வைக்க பயன்படுத்தி வந்த இரும்பு அலமாரியில் உள்ள இடைவெளி மூலம் எனது குழந்தை பாதுகாக்கப்பட்டது. மண்ணில் புதைந்ததும் நான் உதவிக்காக கத்திக்கொண்டே இருந்தேன். ஆனால் யாரும் மீட்க வரவில்லை. இந்த நிலையில் எனது குழந்தை ருத்ரா உரக்க அழுகை குரல் எழுப்பியதை மீட்பு படையினர் கவனித்து மீட்டு விட்டனர். மண் குவியலில் சிறிய கீறல் வழியாக காற்று வந்ததால், அதை சுவாசித்து எங்களால் உயிர் பிழைக்க முடிந்தது’’ என்று உருக்கமாக தெரிவித்தார்.
மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகாவில் மலையடிவாரத்தில் உள்ள மாலின் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 44 வீடுகளும், ஒரு கோவிலும் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. அந்தக் கிராமம், இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த இயற்கைப் பேரிடரில் குறைந்தது 300–க்கும் மேற்பட்டோர் புதைந்து போய் விட்டனர். இந்த நிலச்சரிவு குறித்த தகவல் அறிந்ததும், பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று 3- வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. உருண்டு வந்த பாறைகளும் வீடுகளோடு புதைந்து கிடக்கின்றன. மரங்களும் அடியோடு சாய்ந்து கிடக்கின்றன. அவ்வப்போது மழையும் குறுக்கிட்டு வருவதால் மீட்பு பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவால் கிராமமே அழிந்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 51- தாண்டியது. மிகப்பெரிய அளவில் மீட்புப்பணி நடந்து வருகிறது


தைவானில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்தது 22 பேர் பலி, 270 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பு


தைவானில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்தது

22 பேர் பலி, 270 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பு

தைவான் நாட்டின் கோசிங் நகரத்தில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாயினர். 270 பேர் படுகாயங்களுடன்  மீட்கபட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நகரின் மையத்தில் சாலையின் நடுவே நிலத்தடியில் பல்வேறு பெற்றோலியம் நிறுவனங்கள் குழாய்களை புதைத்து எரிவாயுவை எடுத்து செல்கின்றனர் அந்த குழாய்கள் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தீ பற்றியது. இதனால் சாலையோரத்தில் இருந்த சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
சாலையில் சென்ற வாகனங்களும் விபத்துக்குள்ளாயின. தீ மற்றும் இடிபாடுகளில் சிக்கி 22 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை கோசிங் நகர நிர்வாகம் முடிக்கிவிட்ட நிலையில் அந்நகரத்திற்கு நிலத்தடி குழாய் மூலம் கொண்டு செல்லப்படும் எரிவாயு விநியோகத்தை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்த 270 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இராணுவத்தினர் மற்றும் மீட்பு குழுவினர் 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன


இந்தியாவிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் நிலச்சரிவில் புதைந்து 160 பேர் பலி? இதுவரை 41 சடலங்கள் மீட்பு


இந்தியாவிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில்

நிலச்சரிவில் புதைந்து 160 பேர் பலி?

இதுவரை 41 சடலங்கள் மீட்பு

இந்தியாவிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று முன்தினம் புதன் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மண்மேடுள்ள புனே மாவட்ட கிராமத்திலிருந்து இதுவரை 41 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காயம் அடைந்த நிலை யில் 8 பேரை மீட்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
நிலச்சரிவினால் பெயர்ந்து விழுந்த பாறைகள், மண் சேற்றில் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள மாலின் கிராமம் மண்மேடிட்டுள்ளது. 44 வீடுகள் புதையுண்டுவிட்டன. இதில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படும் இன்னும் 160 பேரை உயிருடன் காப்பாற்றும் வாய்ப்பு இல்லாமலாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கிராமத்தில் நிலச் சரிவு ஏற்பட்டு 24 மணி நேரம் கடந்த நிலையில் 14 பெண்கள், 4 குழந்தைகள் உள்ளிட்ட 41 பேரின் சடலங்கள் புதைவிலிருந்து புதன்கிழமை இரவு அகற்றப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்புப்படை வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்த தகவல்படி புதையுண்டதாக கருதப்படும் 160 பேரில் இன்னும் 115 பேர் நிலச்சரிவில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, மழை நீடிப்பதால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காஸாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல், ஹமாஸ் இயக்கம் ஒப்புதல்; கெய்ரோவில் பேச்சுவார்த்தை


காஸாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல், ஹமாஸ் இயக்கம் ஒப்புதல்;

கெய்ரோவில் பேச்சுவார்த்தை

இன்று காலை 8 மணி முதல் அங்கு போர் நிறுத்தம் 

அமுலுக்கு வருகிறது

காஸா பகுதியில் 3 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும், பாலஸ்தீன ஹமாஸ் இயக்கமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்காஸாமுனை இடையேயான போர் கடந்த மாதம் 8ஆம் திகதி தொடங்கியது. இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். காஸாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலையும், தரைவழி தாக்குதலையும் ஒன்று சேர நடத்தியது
காஸாமுனையில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,444 ஆக உயர்ந்தது. இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள். இஸ்ரேல் 56 வீரர்களையும், பொதுமக்களில் 3 பேரையும் இழந்துள்ளது. ஹமாஸ் போராளிகள் எல்லை தாண்டிச்சென்று தாக்குதல் நடத்தப்பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளை அடுத்த சில நாட்களில் முழுமையாக தகர்த்து விடுவோம் என்று இஸ்ரேல் கூறியதுஇதற்கு ஏற்ற வகையில் காஸாமுனை மீதான தாக்குதலை உக்கிரம் அடையச் செய்கிறவிதத்தில், மேலும் 16 ஆயிரம் வீரர்களை இஸ்ரேல் களம் இறக்கியது. அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
காஸா பகுதியில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை இஸ்ரேலும், பாலஸ்தீனமும் மேற்கொள்ளவேண்டும் என்று .நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்தது.
காஸா பகுதியில் அப்பாவி மக்கள் இதுவரை கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால், சர்வதேச மனிதநல சட்டவிதிகளுக்கு உரிய மதிப்பளித்து அப்பாவி மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டும், அவர்களின் பாதுகாப்பு கருதியும் போர் நிறுத்தம் செய்யவேண்டியது மிகுந்த அவசியமாகும்.
அப்போதுதான் இப்பகுதியில் இழந்த அமைதியை மீட்க முடியும். காஸா பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளும் கிடைக்க வழி பிறக்கும். எனவே, காஸா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம் செய்வதற்கு இரு தரப்பினரும் முன்வரவேண்டும். என்று .நா. பாதுகாப்பு கவுன்சில் வேண்டுகோள் விடுத்தது.
இஸ்ரேல்காஸாமுனை இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட எகிப்து தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த வாரம் பாலஸ்தீன தூதுக்குழுவினரை சந்தித்து, போர் நிறுத்த திட்டம் ஒன்றை அளிக்கிறது.
ஆனால் காஸாமுனையில் 7 ஆண்டுகளாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், எகிப்து படைகளின் முற்றுகையை விலக்கிக்கொண்டால் மட்டுமே சண்டை நிறுத்தம் சாத்தியம் என்று ஹமாஸ் போராளிகள் திட்டவட்டமாக அறிவித்தனர்.
இந்நிலையில் காஸாவில் 3 நாட்கள் (72 மணி நேரம்) போரை நிறுத்திக் கொள்ள இஸ்ரேல் இராணுவம் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. இருதரப்பினரும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த கெய்ரோ செல்கின்றனர்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் .நா. மனித உரிமைகள் ஆணைய செயலாளர் பான் கி மூன் இணையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று காலை 8 மணி முதல் அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வருகிறது என்று கூறியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் .நா.வின் பரிந்துரையை போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் பலமாக உள்ள ஹமாஸ் இயக்கமும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் யுத்தநிறுத்தம் தொடங்கும் வரையில் இருதரப்பினரும் அமைதியாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். போர் நிறுத்த வேலையில் இரு தரப்பினரும் தமது வாக்குறுதிகளை பின்பற்ற வேண்டும். என்று அமெரிக்கா மற்றும் .நா. கேட்டுக் கொண்டுள்ளதுநீண்ட வன்முறைக்கு இடையே பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்களுக்கு இடை ஓய்வு மிகவும் அவசியமானது. இந்த போர் நிறுத்தம் அப்பாவி பொதுமக்களுக்காக கொண்டுவரப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டநிலையில் காஸாமுனை மீதான இஸ்ரேல் தாக்குதல் உக்கிரம் அடைந்ததை அடுத்து அங்கு உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டதை அடுத்து.  72 மணி நேர போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.


நேற்று வியாழன் வரை 1,444 பாலஸ்தீனர்கள் ஷஹீதாகியுள்ளனர் 8350 பேர் காயமடைந்துள்ளனர் (படங்கள்)



நேற்று வியாழன் வரை  1,444 பாலஸ்தீனர்கள் ஷஹீதாகியுள்ளனர்

8350 பேர் காயமடைந்துள்ளனர் (படங்கள்)

காஸாமுனையில் 7 ஆண்டுகளாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், எகிப்து படைகளின் முற்றுகையை விலக்கிக்கொண்டால் மட்டுமே சண்டை நிறுத்தம் சாத்தியம் 

-ஹமாஸ் போராளிகள் திட்டவட்டமாக அறிவிப்பு

காஸாமுனை மீதான இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம் அடைகிறது. இதுவரை 1,444 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 16 ஆயிரம் வீரர்களை இஸ்ரேல் களம் இறக்குகிறது.
இஸ்ரேல்காஸாமுனை இடையேயான போர் கடந்த மாதம் 8 ஆம் திகதி தொடங்கியது. இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்துகின்றனர். காஸாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலையும், தரைவழி தாக்குதலையும் ஒன்று சேர நடத்துகிறது.
காஸாமுனையில் ஜபல்யா என்ற இடத்தில் .நா. நடத்தி வருகிற பாடசாலை மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய  கண்மூடித்தனமான தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு .நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த பாடசாலைக்கு அருகில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினர் மறைந்திருந்து தாக்கியபோது, பதிலடி கொடுக்க வேண்டியதாயிற்று என்று இஸ்ரேல் கூறினாலும், இதை நியாயப்படுத்த முடியாது என பான் கி மூன் கண்டித்துள்ளார்.
இதற்கிடையே ஷெஜய்யா என்ற இடத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.
போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உலகளாவிய அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அவற்றை உதாசீனப்படுத்துகிற விதத்தில் காஸாமுனை மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவது என்று இஸ்ரேல் மந்திரிசபை நேற்று முன்தினம் கூடி முடிவு எடுத்தது.

போரின் 24–வது நாளான நேற்று காலை நிலவரப்படி காஸாமுனையில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,444 ஆக உயர்ந்தது. இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள். இஸ்ரேல் 56 வீரர்களையும், பொதுமக்களில் 3 பேரையும் இழந்துள்ளது.
ஹமாஸ் போராளிகள் எல்லை தாண்டிச்சென்று தாக்குதல் நடத்தப்பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளை அடுத்த சில நாட்களில் முழுமையாக தகர்த்து விடுவோம் என்று இஸ்ரேல் கூறி உள்ளது.
இதற்கு ஏற்ற வகையில் காஸாமுனை மீதான தாக்குதலை உக்கிரம் அடையச் செய்கிறவிதத்தில், மேலும் 16 ஆயிரம் வீரர்களை இஸ்ரேல் களம் இறக்குகிறது. அவர்கள் இப்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதன்மூலம் காஸாமுனை மீதான தாக்குதலில் களம் காணுகிற இஸ்ரேல் வீரர்களின் எண்ணிக்கை 86 ஆயிரம் ஆக உயரும்.
இஸ்ரேல்காஸாமுனை இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட எகிப்து தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த வாரம் பாலஸ்தீன தூதுக்குழுவினரை சந்தித்து, போர் நிறுத்த திட்டம் ஒன்றை அளிக்கிறது.

ஆனால் காஸாமுனையில் 7 ஆண்டுகளாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், எகிப்து படைகளின் முற்றுகையை விலக்கிக்கொண்டால் மட்டுமே சண்டை நிறுத்தம் சாத்தியம் என்று ஹமாஸ் போராளிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.












கோழி இறைச்சியில் 'ஆன்டிபயாடிக்’ எச்சங்கள் இதனைப் பலர் தவிர்ப்பதாகவும் எச்சரிக்கை உணர்வுடன் அணுகுவதாகவும் தெரியவந்துள்ளது.


கோழி இறைச்சியில்  'ஆன்டிபயாடிக் எச்சங்கள்

இதனைப் பலர் தவிர்ப்பதாகவும் எச்சரிக்கை உணர்வுடன் 
அணுகுவதாகவும் தெரியவந்துள்ளது.

கோழி இறைச்சியில் அதிக அளவில் ஆன்டி-பயாடிக் எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அதனைப் பலர் தவிர்ப்பதாகத் தெரியவந்துள்ளது. சிலர் எச்சரிக்கை உணர்வுடன் இதனை அணுகுவதாகவும் கூறியுள்ளனர்.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.) நடத்திய ஓர் ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
டில்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதியில் இருந்து 70 கறிக்கோழி மாதிரிகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 36 மாதிரிகள் டில்லியில் இருந்தும், 12 மாதிரிகள் நொய்டாவில் இருந்தும், 8 கர்காவ்னில் இருந்தும், 7 பரிதாபாத், காஸியாபாத் ஆகியவற்றில் இருந்தும் பெறப்பட்டன.
கோழிப் பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட இந்தக் கறிக் கோழிகளின் ஈரல், தசை, சிறுநீரகம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டது. இதில்தான் ஆன்டி-பயாடிக் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
கோழிவளர்ப்பில் 6 வகையான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன:
ஆக்சி டெட்ராசைக்ளின், குளோரோ டெட்ராசைக்ளின், டாக்ஸி சைக்ளின் (டெட்ராசைக்ளின் வகை), என்ரோபிளாக்சாசின், சிப்ரோபிளாக்சாசின்(ஃப்ளூரோகுய்னாலோன்) நியோமைசின் (அமினோக்ளைகோஸைட்) ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆன்ட்டி பயாடிக் மருந்துகளில் 5 வகை மருந்துகளின் எச்சம் அனைத்து கறிக்கோழிகளிலும் இருந்துள்ளன. கிலோவுக்கு 3.37-131.75 கிராம்/கி.கி ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் எச்சங்கள் கோழிக்கறியில் இருப்பது தெரியவந்தது. 40 சத மாதிரிகளில் இந்த மருந்து எச்சங்கள் இருந்தன. இந்த ஐந்து மாதிரிகளில் 22.9 சத ஆன்டி பயாடிக் எச்சங்கள் இருந்தன என்றும், ஒரு மாதிரியில் மீதமுள்ள 17.1% ஆன்டிபயாடிக் எச்சங்கள் இருந்தன என்றும் தெரியவந்துள்ளது. குர்கவான் பகுதியிலிருந்து பெற்ற  கோழிக்கறி மாதிரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளின் எச்சங்கள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.
கோழிகளின் வாழ்நாளில் 35 முதல் 42 நாட்களுக்குள் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் எவ்விதக் காரணமும் இல்லாமல் அவற்றின் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை விரைவுபடுத்தவுமே கொடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவில், ஒரு சிறு அளவு மட்டுமே தெரியவந்துள்ளது, இன்னும் அதிகமான ஆன்டிபயாடிக் மருந்துகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்படும் பாதிப்பு என அவர்கள் குறிப்பிடுவது, கறிக்கோழிகளுக்கு அதிக அளவு ஆன்டி-பயாடிக் கொடுக்கப்படுவதால், கோழிகளுக்கு வரக்கூடிய நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்பதுதான்!
ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகம் உடலில் சேர்வது, இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும். நாம் சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்டிபயாடிக்குகளை உண்கிறோம். ஆனால், கறிக்கோழியில் அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் ஆன்டிபயாடிக்கினால் குணப்படுத்தமுடியக் கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அந்த மருந்துகள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகச் சேர்ந்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, வேலை செய்யாமல் போய் விடுவதுதான்  எனக் காரணம் கூறப்படுகின்றது.
இந்த சோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் இது குறித்துக் கூறும்போது, "ஆன்டிபயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர், கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை முறையற்ற வகையில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என எச்சரித்துள்ளார்.

இறைச்சி உற்பத்தித் துறையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாட்டைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், தகுந்த சட்டங்களை மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.