Saturday, August 2, 2014

கல்முனை சாதனையாளர்கள் பாராட்டு விழா – 2014 முன்னாள் அமைச்சர் மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்


கல்முனை சாதனையாளர்கள் பாராட்டு விழா – 2014

முன்னாள் அமைச்சர் மன்சூர்
பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்

கல்முனை சாதனையாளர்கள் பாராட்டு விழா இன்று 2 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் கல்முனை அல் - பஹ்றியா மஹா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. 
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் .ஆர். மன்சூர்,கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்வைபவத்தில் முன்னாள் அமைச்சர் மன்சூரின் பாரியார் ஸொஹறா மன்சூர், சட்டத்தரணி எம்.சி ஆதம்பாவா, டாக்டர் யூஸூப் மற்றும் கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் நிழல் கல்வி பிரதியமைச்சருமான, தீனத் பவுண்டேசனின் சிரேஷ்ட உறுப்பினருமான சகோ. .எம். முஹம்மட் முஜீபின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், .பொ.. (சா.) பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், .பொ. (.) பரீட்சையில் சித்தியெய்தி பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்  ஆகியோர்  பாராட்டப்பட்டு பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.













No comments:

Post a Comment