Saturday, August 30, 2014

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் 3 மணித்தியாலங்கள் தாமதமாக வழங்கப்பட்ட மின்சாரம் மின் பாவனையாளர்கள் அவதியால் ஆத்திரம்


அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில்
3 மணித்தியாலங்கள் தாமதமாக வழங்கப்பட்ட மின்சாரம்
மின் பாவனையாளர்கள் அவதியால் ஆத்திரம்


இன்று அம்பாறை மாவட்டம் கல்முனைக் கரையோரப் பிரதேசத்தில் இலங்கை மின்சார சபையின் கல்முனை மின் பொறியியலாளரின் அறிவித்தலின் பிரகாரம் காலையிலிருந்து மாலை 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின் பாவனையாளர்களுக்கு அறிவித்தல் கொடுத்துவிட்டு  அறிவித்தல் பிரகாரம் மாலை 5.00 மணிக்கு மின்சாரம் வழங்கப்படாமல் 3 மணித்தியாலங்கள் தாமதமாக அதாவது இரவு 8.00 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது குறித்து கல்முனைப் பிரதேச மக்கள் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.
இது சம்மந்தமாக இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவரிடம் மின் பாவனையாளர் ஒருவர் தொடர்பு கொண்டபோது மேலிடத்தின் உத்தரவின் பிரகாரம் மின்சார திருத்த வேலைகள் காரணமாக இவ்வாறு துண்டிக்கப்படும் மின்சாரம் இப்பிரதேச மக்களின் தேவையை உணர்ந்து உரிய நேரத்தில் மீண்டும் வழங்குவதற்கு திருத்த வேலைகளுக்கு பொறுப்பானவர்கள் கவனத்தில் கொள்வதாக இல்லை. இது குறித்து இப் பிரதேச மக்கள் இலங்கை மின்சார சபையின் உயர்பீடம், மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றில்  முறையீடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டதாம்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு காலதாமதமானதால்  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் குடிநீர் கூட துண்டிக்கப்பட்டு அப்பிரதேச மக்கள்  அவதிக்குள்ளானார்கள் எனவும் அறிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment