Sunday, August 31, 2014

பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை தலைமைச் செயலக கட்டடத்துக்குள் நுழைந்தனர் எதிர்ப்பாளர்கள்


பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை
தலைமைச் செயலக கட்டடத்துக்குள் நுழைந்தனர் எதிர்ப்பாளர்கள்


பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராடி வரும் பாகிஸ்தான் தெஹரிக் இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், மற்றும் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் தலைவர் தலைவர் தாஹிர் தலைமையிலான போராட்ட குழுவை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதையும் மீறி இன்று போராட்டக்காரர்கள் தலைமைச் செயலக கட்டடத்துக்குள் நுழைந்தனர். இராணுவ அதிகாரிகள் எந்த நுழைவாயிலிலும் நுழைய முடியாதபடி எதிர்ப்பாளர்களை தடுத்து நிறுத்தினர் என அறிவிக்கப்படுகின்றது.

ஊவா தேர்தலில் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டுமாம் வாகாளர்களிடம் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை


ஊவா தேர்தலில் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டுமாம் 

வாகாளர்களிடம் அரசில் அங்கம் வகிக்கும்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை



எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் எனஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரும்  முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான  ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறக்கப்படாமையானது ஊவா வாழ் முஸ்லிம்களை புறந்தள்ளியிருப்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்நாட்டில் அனைத்து இன மக்களும் பலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொதுபலசேனா மாத்திரம் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஊர்வலம் செல்கிறது. இவற்றுக்கு ஆதரவு வழங்குவது யார் என்பது எமக்கு தெரியும். இவ்வாறான நிலையில் எவ்வாறு முஸ்லிம்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இனி ஒருபோதும் ஜே.வி.பி.யும் ஐ.தே.கட்சியும் ஒன்று சேரப்போவதில்லை. ஐ.தே.கட்சிக்கு ஏற்பட்டுள்ள சரிவை பல கட்சிகள் முஸ்லிம்களைக் கொண்டு சவாரி செய்யப்பார்க்கின்றன. ஏன் அவர்கள் சிங்களவர்களை தம்வசப்படுத்தாமல் இருக்கின்றார்கள் என்பது கேள்வியாகியுள்ளது.
 ஜே.வி.பி. முஸ்லிம்களின் வாக்குகளை சூறையாட புதிய வியூகம் ஒன்றை வகுத்து வருகிறது. ஜே.வி.பி. யினால் முஸ்லிம்களுக்கு எதையும் செய்திட முடியாது. அவற்றுக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் சோரம்போக மாட்டார்கள்.

ஊவா தேர்தலில் அரசாங்கத்துக்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் முஸ்லிம்களை கண்டுகொள்ளவில்லை என்பதை அரசு சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரையேனும் களமிறக்கப்படாததை வெளிக்காட்டியுள்ளது. இதனை மறைக்கவோ தற்போது எமது கூட்டமைப்பு அவர்களின் கடிவாளம் கைக்கூலிகள் என கூறி வருகின்றனர்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டபின் எந்தவொரு வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லையாம்!!! - ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டபின்
எந்தவொரு வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லையாம்!!!
- ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்


நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ளபோதும் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறாமையானது கவனிக்கப்பட வேண்டியதொரு விடயம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் ஒவ்வொரு வன்முறைகள் நடைபெற்று வந்த நிலையில் பயங்கரவாதத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், உலகின் எந்தவொரு பகுதியிலும் இல்லாத வகையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்கள் முடிவடைந்துள்ள போதும் ஒரு வன்முறைகூட இடம்பெறவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு பயங்கரவாதத்தை ஒழித்தது மட்டுமன்றி இதுவரை எந்தவொரு வன்முறையும் இடம்பெறுவதற்கு அனுமதிக்கவில்லையென்பது பாரியதொரு அடைவாகும்.
கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி முன்னேறும் அதேநேரம், அரசியல் ஸ்திரத்தன்மையொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் அக்கறை காட்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இந்த அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் அப்பால் தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் இலங்கை பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்லோவேனியா குடியரசின் பிளெட் நகரில் நடைபெற்ற பிளெட் மூலோபாய பேரவை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இப்படித் தெரிவித்துள்ளார். 

ஐ.எஸ். ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்கு எதிராக பிரிட்டனில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பத்வா


ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்கு எதிராக
பிரிட்டனில்  இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பத்வா



இஸ்லாமிய தேச (.எஸ்.) போராட்ட இயக்கத்தில் பிரிட்டிஷ் முஸ்லிம்கள் சேர்ந்து சிரியா, ஈராக் போன்ற இடங்களில் சண்டையிடச் செல்வதற்கு எதிராக "பத்வா' வழங்கப்பட்டு  தடை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன், மான்செஸ்டர், பர்மிங்ஹாம், லீட்ஸ், லீஸ்டர் ஆகிய இடங்களைச் சேர்ந்த 6 மூத்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இந்த பத்வாவை வழங்கி தடை உத்தரவையும் வெளியிட்டுள்ளனர் என "சண்டே டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
இவர்கள் சார்பாக கிழக்கு லண்டனில் உள்ள மஸ்ஜித் அல்-தெளஹீத் மசூதியின் முன்னாள் இமாம் ஷேக் உசாமா ஹஸன் இந்த பத்வாவை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விவரம்:
இஸ்லாமிய மதச் சட்டங்களின் கீழும், நீதி முறையின் கீழும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அவரவர் நாட்டுக்கு கடமையாற்றக் கட்டுப்பட்டவர்கள். இதை மீறி சிரியாவில் எந்தப் பிரிவுடனாவது சேர்ந்து சண்டையிடுவதற்காகச் செல்வது தடை (ஹராம்) செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) இயக்கமானது, அடக்குமுறையும் கொடுங்கோன்மையும் கொண்டுள்ளது என இந்த பத்வா குறிப்பிடுகிறது.
விஷத்தன்மை மிக்க அவ்வியக்கத்தின் சித்தாந்தத்தைப் பரப்புவதை, குறிப்பாக பிரிட்டனில் பரப்புவதை, முஸ்லிம்கள் எதிர்க்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்கு எதிரான .எஸ். போராளிகளின் அச்சுறுத்தல் "குறிப்பிடத் தகுந்தது' என்ற நிலையிலிருந்து "தீவிரமானது' என்று அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. பிரிட்டனுக்கு எதிராகத் தாக்குதல் நிகழ அதிக வாய்ப்புள்ளது என்பது இதன் பொருள். இந்நிலையில், பத்வா வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து ஈராக், சிரியா போன்ற இடங்களுக்குச் சென்று, ஜிஹாத் புனிதப்போரில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் நாடு திரும்புவதை தடை செய்ய உதவும் சட்டம் ஒன்றை இயற்றுவது குறித்து அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் இன்று திங்கள்கிழமை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களின் பாஸ்போர்ட்டை இரத்து செய்வது உள்ளிட்ட சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவது குறித்து பிரிட்டிஷ் அரசு ஆலோசித்து வருகிறது.
தீவிரவாதக் கொள்கைகளில் ஈடுபாடு காட்டி வரும் பிரிட்டிஷ் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் இப்போது பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்படுகின்றது..
தீவிரவாதத்தில் ஏற்பட்டுள்ள ஆர்வத்தைப் போக்கி, முஸ்லிம் இளைஞர்களை நல்வழிக்குத் திருப்பும் "சேனல்' என்கிற ஆலோசனைத் திட்டத்தை பிரிட்டிஷ் அரசு செயல்படுத்தி வருகிறது.
பிரிட்டனின் தலைமைக் காவல் அதிகாரிகள் சங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2012-13ஆம் ஆண்டில் 748 இளைஞர்களுக்கு தீவிரவாதத்துக்கு எதிரான ஆலோசனை வழங்கப்பட்டது. 2013-2014ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,281-ஆக அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக், சிரியாவில் நடைபெற்று வரும் சண்டையில் பிரிட்டிஷ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ள விவரம் வெளியானதிலிருந்து, "சேனல்' திட்டத்தில் ஆலோசனை பெறுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவாஸ் ஷெரிப் பதவி விலகக்கோரி எதிர்கட்சிகள் பாரிய போராட்டம் பொலிஸாருடன் நடந்த மோதலில் 8 பேர் பலி

நவாஸ் ஷெரிப் பதவி விலகக்கோரி எதிர்கட்சிகள் பாரிய போராட்டம் 

பொலிஸாருடன் நடந்த மோதலில் 8 பேர் பலி

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக எதிர்க் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன. கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியும், மத குரு தார் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியும் இப்போது கூட்டணி அமைத்து, நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. தேர்தலில் ஊழல் செய்து நவாஸ் ஷெரீப் ஆட்சியைப் பிடித்து விட்டதாக அவை குற்றம் சாட்டுகின்றன.
நவாஸ் ஷெரீப் பதவி விலகக்கோரி, தலைநகர் இஸ்லாமாபாத்தில் இவ்விரு கட்சிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் நவாஸ் ஷெரீப் பதவி விலக திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இம்ரான் கானும், தார் உல் காதிரியும், பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டின் முன்பாக கூடி தர்ணாவில் ஈடுபடும்படி தங்கள் கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரு கட்சி தொண்டர்களும், பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை நோக்கி அணி வகுத்துச் சென்றனர். போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கலவர தடுப்பு பொலிஸார் கண்ணீர்புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் வீசினர்.
ஏராளமான தொண்டர்கள் அருகில் உள்ள பாராளுமன்ற வளாகத்தினுள் நுழைந்து, தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் விரட்டியடித்தனர்.
இந்த சம்பவத்தின்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பொலிஸாரை போராட்டக்காரர்கள் தடிகளால் தாக்கினர். கற்களை வீசினர். இதன் காரணமாக அந்த பகுதியே போர்க்களமாக மாறியது.
இந்த மோதலில் 3 பேர் உயிர் இழந்தனர். படுகாயம் அடைந்த 450-க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாமாபாத் பாலிகிளினிக்கிலும், பாகிஸ்தான் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். போராட்டக்காரர்களின் தாக்குதலில் 75 பொலிஸார் காயம் அடைந்தனர். இதில் செய்தி சேகரிக்க சென்றிருந்த பத்திரிகையாளர்களும் சிக்கி படுகாயம் அடைந்தனர். கண்டெய்னர்கள், வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இந்த கலவரத்தில் தனது கட்சி தொண்டர்கள் 7 பேர் பொலிஸார் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி தலைவர் தார் உல் காதிரி கூறியுள்ளார். இம்ரான்கான் தனது கட்சி தொண்டர் ஒருவர் பொலிஸ் தாக்குதலில் பலியாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் மத்தியில் அவ்வப்போது இம்ரான்கான் பேசினார். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதற்காக நவாஸ் ஷெரீப் சகோதரர்கள், உள்துறை மந்திரி நிசார் அலிக்கான் ஆகியோர் மீது வழக்கு தொடரப்போவதாக அவர் அறிவித்தார்.
போராட்டம் 18-வது நாளை எட்டிய நிலையில், நவாஸ் ஷெரீப் பதவி விலகும் வரையில் ஓயப்போவதில்லை என்று இம்ரான்கான் கட்சியின் மூத்த தலைவர் பர்வேஸ் கட்டாக் அறிவித்தார். மத குருவும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி தலைவருமான தார் உல் காதிரியும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.
போராட்டக்காரர்கள் தாக்கு தலில் ஈடுபடக்கூடும் என கருதி, பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் லாகூர் இல்லத்தை நோக்கி செல்லக்கூடிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. பலத்த பாது காப்பும் போடப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் பதற்றம் நிலவிய சூழலில், நவாஸ் ஷெரீப் லாகூர் சென்று விட்ட தாக தகவல்கள் கூறின. ஆனால் அவர் பிற்பகலில் இஸ்லாமாபாத் திரும்பி விட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
தகவல் துறை மந்திரி பர்வேஸ் ரஷீத், “பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி, போராட்டக்காரர்கள் குற்றம் செய்து விட்டனர்என கூறினார்.
லாகூரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் சியால் கோட் என்ற இடத்தில் உள்ள இராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் இல்லத்தை நோக்கி இம்ரான்கான் ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல் தொடுத்தனர். அவர்களை பொலிஸார் விரட்டியடித்தனர்.
இஸ்லாமாபாத்துக்கு வெளியே லாகூர், கராச்சி என பிற நகரங்களுக்கும் கலவரம் பரவி வருகிற நிலையில், கலவரத்தை தூண்டி விட்டதற்காக இம்ரான் கானுக்கும், தார் உல் காதிரிக்கும் பிற எதிர்க் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத் திரும்பிய பிரதமர் நவாஸ் ஷெரீப் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் மூத்த அமைச்சர்கள் சவுத்ரி நிசார், சாத் ரபீக், அப்துல் காதிர் பலோச், கவாஜா ஆசிப் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தையும், தற்போதைய அரசியல் நிலவரத்தையும் எப்படி கையாள்வது என விவாதித்தனர். நாளை (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்ற கூட்டு கூட்டத்தை நடத்துவது என முடிவு எடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
கலவரம் தொடர்ந்து நடைபெறுவதால், இது தொடர்பாக விவாதிக்க இராணுவ உயர் அதிகாரிகளின் கூட்டத்தை இராணுவ தலைமை தளபதி ஜெனரல் ரஷீல் ஷெரீப் நேற்று மாலை கூட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் தற்போது நிலவிவருகிற பதற்ற நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் குறித்து அவர் விவாதித்தார்.

இதற்கிடையே போராட்டக் காரர்களுடன் மீண்டும் பேச்சு நடத்த தயார் என செய்தித்துறை அமைச்சர் பர்வேஸ் ரஷீத் அறிவித்துள்ளார்.



ர்.

ஹஜ் கோட்டாப் பகிர்வின் போது எழுந்த பிரச்சனையால் விளைவாக்கப்படக் கூடிய விளைவுகள்..!! (துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)


ஹஜ் கோட்டாப் பகிர்வின் போது எழுந்த பிரச்சனையால்
விளைவாக்கப்படக் கூடிய விளைவுகள்..!!

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

சுய நலம் கொண்ட எம்மவர்களின் சில அறியாமைச் செயற்பாடுகள் சமுகத்திற்கு மிகப் பாரிய விளைவுக்களை ஏற்படுத்துகின்றன.அந்த வகையில் எம்மவர்களின் பல விடயங்களை சுட்டிக்காட்ட முடியுமாக இருப்பினும்,அண்மையில் நடந்தேறிய ஹஜ் கோட்டாப் பகிர்வு எந்தளவு முஸ்லிம்களிடத்திலும்,இஸ்லாத்திலும் தாக்கம் செலுத்தப்போகிறது என்பதை நாம் சற்று ஆராய்வதனூடாக இவ்வாறன செயற்பாடுகள் எதிர் காலத்தில் நடந்தேறாது தடுக்க முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொருவரும்  கடமைப்பட்டுள்ளோம்.
" 2250 கோட்டாக்களை 89 முகவர்களிடையே பகிர வேண்டிய ஹஜ் கோட்டாப் பகிர்வு விடயத்தில் அநீதி நடந்ததாக பிரச்சனைகள் எழுந்து நீதி வேண்டி நீதி மன்றம் சென்ற போது,நீதி மன்றமோ  கோட்டாப் பகிர்வை புத்தாசன அமைச்சிடம் கையளித்தது."
அரசாங்கமானது  முஸ்லிம்களின் மத விவகாரமான ஹஜ் விடயத்தை  முஸ்லிம்களாகிய நீங்களே கையாளுங்கள் எனத் தந்த போது,எமது செயற்பாடுகளின் விளைவுகள், எங்கே எம்மைக் கொண்டுசென்றது தெரியுமா..??
"நீதி,நேர்மை,சமாதானத்தை போதிக்கும் மதத்திலுள்ள நாம் எங்களால் தீர்க்க முடியாது என்ற முடிவிற்கு வந்து  நீதி,நேர்மை,சமாதானத்தை போதிக்க  வேண்டியவர்களிடம் போய் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துரைக்கும் ஹஜ் விடயத்தில் எங்களவர்கள் சுயநல வாதிகள்.நீங்களே தீர்த்துத் தாருங்கள்"என கை கட்டி நிற்க வேண்டிய மிகக் கேவலமான  நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
இதை விடக் கேவலம் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு என்னதான் உண்டு?? 
நாம் எமது மதத்தை பேரிண மக்களிடம் எடுத்துச் செல்லுகின்ற போது நீதி,நேர்மை,சமாதானத்தை தேடி எங்களிடம் வந்த நீங்களா??எங்களிடம் நீதி,நேர்மை,சமாதானத்தை போதிக்கிறீர்கள்??என வினா எழுப்பினால் எங்கள் முகத்தை எங்கே கொண்டு வைப்பது..??
ஹஜ் சமூக ஒற்றுமைக்கு வித்திடுகிறது.என நாம் கூறினால் முதல் ஹஜ் இற்கு அழைத்துச் சென்று வழி காட்டும் நீங்கள் ஹஜ் கோட்டாப் பகிர்வு விடயத்தில் ஒற்றுமையாக இருந்தீர்களா??எனக் கேட்டால் யாது பதிலளிக்க இயலும்??
இனி என்ன??வழமையான கதையான முஸ்லிம்களை  பார்க்க வேண்டாம்,இஸ்லாத்தை பாருங்கள் எனக் கூறி இஸ்லாத்தை பரப்ப வேண்டிய நிலைக்கு உந்தப்படுவோம்.
இவ்வாறான செயற்பாடுகள் எம்மவர்களிடையே மிகைத்துக் காணப்படுகின்ற போது எமது மதம் நீதி,நேர்மை,சமாதானத்தை, ஒற்றுமையை போதிக்கிறது என்றால் முதலில் நம்புவார்களா?? நம்பத் தான் முயற்சிப்பார்களா..??
எம் சமுகம் அரங்கேற்றிய இன் நிகழ்வு மக்களை இஸ்லாத்தை அறிவதை விட்டும் கூட தூரமாக்குகின்றது என்றால் நாம் எவ்வளவு பெரிய பாவிகள்??
உண்மையில் ஹஜ் கோட்டாப் பகிர்வை நேரடியாக அரசாங்கம் கையாண்டிருந்தாலோ அல்லது புத்தாசன அமைச்சு கையான்டிருந்தாலோ இந்தப் பிரச்சனைகள் இவ்வளவு தூரம் விஸ்வரூபம் எடுத்திருக்காது.வேற்று மதத்தினரிடையே முஸ்லிம்களும் தலை குனிய வேண்டிய நிலையும்  ஏற்பட்டிருக்காது.ஆனால்,முஸ்லிம்களாகிய  நாம் "பார்த்தீர்களா..?அரசின் செயற்பாட்டை"என தூசித்து தள்ளி இருப்போமல்லவா??
இப்போது என்ன நடக்கப் போகிறது தெரியுமா..??
பிரச்சனை முற்றி சந்தைக்கு வந்ததால் அமைச்சர் பௌசி தனது நிலைப்பாட்டை சரி என நிரூபிக்க ஹஜ் கோட்டாப் பகிர்வு விடயத்தை  அரசிடம் ஒப்படைக்கப்போகிறாராம்.நீதி மன்றம் ஒப்படைத்தது போன்று அரசு புத்தாசன அமைச்சிடம் ஹஜ் கோட்டாப் பகிர்வு விடயத்தை ஒப்படைத்தால் எங்கனம் எம்மால் ஓல மிட முடியும்..??
பள்ளிவாயல் ஒன்றை நாம் நிறுவுவதற்கு  புத்தசாசன அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்று உள்ள போது,புத்தசாசன அமைச்சிடம் இது ஒப்டைக்கப்படுவது  என்பது ஓர் பெரிய விடயமா??
ஏற்கனவே பள்ளிவாயல் ஒன்றை நாம் நிறுவுவதற்கு  புத்தாசன அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிலையில் உள்ள நாம்,மென் மேலும் எமது செயற்பாடுகளில் புத்தாசன  அமைச்சு நுழைய நாம் அனுமதிப்பது முஸ்லிம் சமுகத்திற்கு அவ்வளவு உசிதமானது அல்ல.
எனினும்,முன்பு  அரசு செய்தது போன்று விசேட குழு ஒன்றிடம் இது ஒப்படைக்கப் படலாம் என்றும் நம்பப் படுகிறது.
எம்மவர்கள் சிலர் இலகுவாக செய்ததன் விளைவு எம்மை எங்கே??கொண்டு சேர்க்கப்போகிறது பார்த்தீர்களா??
எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.
அல்லாஹ்வைப் பயந்து எமது செயற்பாடுகளை அமைப்போமாக.


பிரேசிலில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி

பிரேசிலில் விமானம் விழுந்து
விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி


பிரேசில் நாட்டில் உள்ள லோன்ட்ரினா நகரத்தை நோக்கி செஸ்னா 177 ரக விமானம் ஒன்று சென்றது. இதில் 4 பேர் பயணம் செய்தனர். பிரேசிலின் தெற்கு பகுதியில் உள்ள குரிடியா என்ற இடத்தில் வந்தபோது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் சிறுகாயங்களுடன் தப்பியுள்ளார் என அந்நாட்டு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 10 ம் திகதி ஆரம்பம்


சர்வதேச புத்தக கண்காட்சி
எதிர்வரும் 10 ம் திகதி ஆரம்பம்

116 வது சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்படுகின்றது. 
 இக் கண்காட்சியில் 165 உள்நாட்டு வெளியீட்டாளர்களும் 36 வெளிநாட்டு வெளியீட்டாளர்களும் பங்களிப்பு செய்யவுள்ளனர்.
 தரமான குழந்தைக் கல்விக்கான விளையாட்டுப் பொருட்கள், பயிற்சிப் புத்தகங்கள் உட்பட பல பொருட்கள் இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


விரைவில் மேலும் 1000 புதிய கிராமநிலதாரிகள்


விரைவில் மேலும் 1000 புதிய கிராமநிலதாரிகள்


நாடளாவிய ரீதியில் நிலவும் கிராம நிலதாரி  வெற்றிடங்களை நிரப்பும் வகையில் மேலும் 1000 கிராம நிலதாரிகளை புதிதாக நியமிப்பதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.    நாடளாவிய ரீதியில் மேலும் சுமார்  1600 வெற்றிடங்கள் தற்போது நிலவுகின்றன. அவற்றை நிரப்பும் வகையில் 1000 பேருக்கு நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையில் நியமனம் பெற்றவர்களுக்கு அடுத்ததாக அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களிலிருந்து நேர்முகப் பரீட்சை மூலம் மேலும் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் எனவும் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாடளாவிய ரீதியில் 4ஆயிரம் கிராம நிலதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் 7 பேர் உயிரிழப்பு


பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கலவரத்தால்
7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீடு நோக்கி பேரணியாக சென்றவர்கள் மீது  பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதால் இஸ்லாமாபாத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறதுமுன்னதாக பிரதமர் நவாஸ் இல்லம் நோக்கி பேரணியாக சென்றவர்கள் மீது அந்நாட்டு பொலிஸார் தடியடி நடத்தினர்இதனையடுத்து பேரணி சென்றவர்களும் பொலிஸார் மீது கல் வீசித்தாக்குதல் நடத்த துவங்கினார்இதில் மோதல் முற்றியதில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக கோரி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்முறைகேடுகள் செய்து ஷெரீப் ஆட்சியை பிடித்ததாக அந்நாட்டு எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனபாக் அவாமி தெஹ்ரிக் கட்சித் தலைவர் தாஹீர் உல்காத்ரி தலமையில் நவாஸ் பதவி விலக கோரிஅவரது இல்லம் நோக்கி பேரணியாக சென்றனர்அப்போது ஏற்பட்ட கலரவரத்தில் பெண் உட்பட போராட்டக்காரர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனநூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த தாக்குதலுக்கு பிரதமர் நவாஸ் பொறுப்பேற்க வேண்டும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்நவாஸ் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்இதனிடையே தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் திடீரென்று லாகூருக்கு சென்று விட்டார்தாம் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்ஆனால் இன்று தான் நவாஸ் ஷெரீப் ஆட்சியின் கடைசி நாள் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளதால் பெரும் பதற்றம் நீடிக்கிறது.