Saturday, August 30, 2014

கல்முனையில் கடின பந்து பயிற்சி கூடம் மேயர் நிஸாம் காரியப்பர்,பெஸ்டர் றியாஸ் ஆகியோர்களால் திறந்து வைப்பு


கல்முனையில் கடின பந்து பயிற்சி கூடம்
மேயர் நிஸாம் காரியப்பர் திறந்து வைப்பு

கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான பெஸ்டர் றியாஸின் முயற்சியினால் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கடின பந்து பயிற்சி கூடம் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான பெஸ்டர் றியாஸ் ஆகியோர் இப்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி .டபிள்யு..கப்பார், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் எம்.எல்.எம்.ஜமால்டீன், சட்டத்தரணி றொசான் அக்தர், ஓய்வுபெற்ற உடற்கல்வி விரிவுரையாளர் எம்..எம்.முஸ்தபா, முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் உட்பட விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளும் மற்றும் பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்.











.

No comments:

Post a Comment