Sunday, October 12, 2014

ஹுத்ஹுத் புயல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் கரையை கடந்தது ஆந்திரா, ஒடிசா பகுதிகளில் 5 பேர் பலி



ஹுத்ஹுத் புயல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில்
 கரையை கடந்தது
ஆந்திரா, ஒடிசா பகுதிகளில் 5 பேர் பலி

ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் வடக்கு அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியது. ஹுத்ஹுத் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மிகமிக தீவிரப் புயலாக உருவெடுத்தது.
ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
ஹுத்ஹுத் புயல் மழைக்கு ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் இரண்டு பேர், விசாகப்பட்டினத்தில் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். ஹுத்ஹுத் புயலினால் ஏற்பட்டுள்ள முதல் பலி இவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

.


No comments:

Post a Comment