Friday, October 31, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் போராட்ட இயக்கத்தில் 15 ஆயிரம் வெளிநாட்டு ஜிஹாதிகள் சேர்ந்து உள்ளனர் ஐ.நா தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ் போராட்ட இயக்கத்தில்
15 ஆயிரம் வெளிநாட்டு ஜிஹாதிகள் சேர்ந்து உள்ளனர்
ஐ.நா தகவல்

.எஸ்..எஸ் போராளிகள் ஈராக் மற்றும் சிரியாவின் பல நகரங்களை கைப்பற்றி இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். .எஸ்..எஸ் போராளிகள் இயக்கத்தில் சேர்ந்து ஆயுத ஏந்தி போரிட பல்வேறு நாடுகளில் இருந்து ஜிஹாதிகள் அந்த இயக்கத்தில் சேர்ந்ததவாறு உள்ளனர் என ஐ.நா தெரிவித்து உள்ளது. புதிதாக 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அந்த இயக்கத்தில் சேருகின்றனர்.எந்த பிரச்சினையும்  இல்லாமல் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு நடந்து வருகிறது எனவும் அறிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ், ரஷ்யா, மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து போராட்ட இயத்திற்கு அதிகமான ஆட்கள் எடுக்கபட்டு உள்ளனர் என ஐ.நா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது..எஸ்..எஸ் போராட்ட இயக்கம் தொடங்கியதில் இருந்து 15 ஆயிரம் பேர் சேர்ந்து உள்ளனர். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 3 ஆயிரம் பேர் இதில் சேர்ந்து உள்ளதாக  .நா குழு கணக்கிட்டு உள்ளது.

.எஸ்..எஸ் போராட்ட இயக்கம் தனது சோஷியல் மீடியா மற்றும் ஜிஹாதி ஆதரவாளர்கள் நெட்வொர்க் மூலம் ஆட்களை தேர்வு செய்கிறது. பெரும்பாலான ஆதரவாளர்கள் மேற்கில் இருந்து தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.அவர்கள் மிகவும் இளைய வயதினராக  உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, October 30, 2014

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் செயல் குறித்து ஜனாதிபதிக்கு முறைப்பாடு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்தியரின்
செயல் குறித்து ஜனாதிபதிக்கு முறைப்பாடு!



கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவர், பெண்ணொருவரை அவமானப்படுத்தும் வகையிலும், தொழில் தர்மத்துக்கு முரணாகவும் நடந்து கொண்டமை தொடர்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முறைப்பாடொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது .
கல்முனை – 03 இல் வசிக்கும் ஆசிரியை ஒருவர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கு எதிராக இந்த முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்கைக்காக, தான் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட வைத்தியர், தன்மீது உளரீதியான வன்முறைகளை மேற்கொண்டதாகவும், தன்னை அவமானப்படுத்தியதாகவும், தொழில் தர்மத்துக்கு முரணாக நடந்து கொண்டதாகவும்ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள முறைப்பாட்டில் மேற்படி ஆசிரியை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடும் வயிற்று நோவு காரணமாக கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி அதிகாலை 4.30 மணிக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்.
எனினும் அன்றைய தினம் இரவு ஏழு மணி வரைஎனக்கு எந்தவித மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை, குறித்த தினம் காலை 10 மணியளவில் நோயாளர்களை பார்வையிட வந்த குறிப்பிட்ட வைத்தியர்எனது வயிற்றுப் பகுதியை பரிசோதிக்க முயற்சித்தார். ஆனாலும், ஆண் வைத்தியர் என்பதால் நான் தயக்கம் காட்டினேன்.
இதனால், கோபம் கொண்ட வைத்தியர்நான் யார் எனவும், எங்கிருந்து வந்துள்ளேன் என்றும் அருகிலிருந்த தாதியிடம் விசாரித்தார். நான் கல்முனைக்குடியிலிருந்து வந்துள்ளதாக தாதி கூறினார். இதனைக் கேட்டதும், என்னைகழுதை, நாய் என்கிற மிக மோசமான வார்த்தைகளால் அந்த வைத்தியர் திட்ட ஆரம்பித்தார். ஏனைய நோயாளிகளுக்கு மத்தியிலேயே இது நடந்தது.
மேலும், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு செல்லாமல்ஏன் இங்கு வந்தாய் எனக் கேட்டதோடு, தொடர்ந்தும் அவர் என்னைத் திட்டினார்.
குறித்த வைத்தியர், இதுபோன்று இதற்கு முன்னரும் நோயாளர்களிடம் நடந்து கொண்டதாக தெரியவருகிறது.
இந்த வைத்தியரினால்பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு நான் உள்ளாகியுள்ளதோடு, உளரீதியான அவமானங்களுக்கும் ஆகியிருக்கின்றேன்.
எனவே, இவ் விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட வைத்தியருக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’.
இந்த கடிதத்தின் பிரதிகள் சுகாதார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



டிசம்பர் மாதத்தில் 6 நாட்கள் இருளில் மூழ்கப் போகும் பூமி!


டிசம்பர் மாதத்தில் 6 நாட்கள்
இருளில் மூழ்கப் போகும் பூமி!

இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார்.
நாசாவின் லைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சூரிய மண்டலப் புயலால் பூமி இருளில் மூழ்கினாலும் எந்தவித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது.
இதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லைஇது 250 வருடங்களில் ஏற்படப்போகின்ற மிகப்பெரிய சூரிய மண்டல புயலாகும்.
216 மணித்தியாலங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் ஆறு நாட்கள் பூமியில் மின் விளக்குகளுடனேயே செயலாற்ற வேண்டி வரும் என்று குறிப்பிட்டார்.
இது சம்பந்தமாக மேலதிக விபரங்களை நாசா இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென விஞ்ஞானி ஏர்ல் கொடோயில் தெரிவிக்கின்றனர்.




Wednesday, October 29, 2014

மாணவரின் கன்னத்தைக் கிள்ளிய ஆசிரியைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் இந்தியாவில் சம்பவம்

மாணவரின் கன்னத்தைக் கிள்ளிய ஆசிரியைக்கு
ரூ.50 ஆயிரம் அபராதம்
இந்தியாவில் சம்பவம்


சென்னையில் தனியார் பாடசாலை ஒன்றில் மாணவரின் கன்னத்தைக் கிள்ளி துன்புறுத்திய ஆசிரியைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ராம்கௌரி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மயிலாப்பூரில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் பயிலும் தனது மகனின் கன்னத்தைக் கிள்ளி பாடசாலை ஆசிரியை மெஹருன்னிசா துன்புறுத்தியதாகவும், இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட்டதில், மாணவனுக்கு ரூ.ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிடுமாறு மனுவில் ராம்கௌரி கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கௌல் மற்றும் நீதிபதி சத்ய நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மாணவனை துன்புறுத்திய ஆசிரியருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், ஆசிரியர் மீதுள்ள குற்றவியல் வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள பெற்றோர் முன்வர வேண்டும் என்றும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர் என அறிவிக்கப்படுகின்றது.

போர்க்குற்றம் வங்காள தேச ஜமாத் -இ- இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை

போர்க்குற்றம்
வங்காள தேச ஜமாத் -இ- இஸ்லாமி தலைவருக்கு
மரண தண்டனை



வங்காளதேச நாட்டில் கடந்த 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் உள் நாட்டு தலைவர்களின் உதவியுடன் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்  30 லட்சம் மக்களை கொன்று குவித்தனர்.  2 லட்சத்துக்கும் அதிகமான  பெண்களை கற்பழித்தனர்., 9 மாத போரில் 1 கோடி மக்கள் இந்திய எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர் எனக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது

சுதந்திர போராட்டத்தின் போது போர் குற்றம் புரிந்ததாக  ஜமாத் -- இஸ்லாமி கடசியின் தலைவர் மிதியூர் நிஸாமி மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் மீது இனப்படுகொலை, கொலை, சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் சொத்துக்களை அழித்தல் உளபட 16 வழக்குகள் பதிவு செய்யபட்டது. இந்த வழக்கை விசாரித்த எம்.எனயதூர் ரஹீம் தலைமையிலான சிறப் நீதிமன்ற நீதிபதிகள்  நிஸாமிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியுள்ளனர்.

Monday, October 27, 2014

சாய்ந்தமருதில் அமைக்கப்பட்டுள்ள தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவின் பெயர் பலகை மீது தாக்குதல்!

சாய்ந்தமருதில் அமைக்கப்பட்டுள்ள
தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவின்
பெயர் பலகை மீது தாக்குதல்!

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவின் பெயர் பலகை மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பெயர் பலகை சேதமடைந்துள்ளது.
கடந்த 23 ஆம் திகதி இப்பூங்கா திறந்து வைக்கப்பட்ட போதிலும் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணத் தொகுதிகள் உள்ளிட்ட இன்னும் சில நவீன வசதிகள் மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் இப்பணிகள் அனைத்தும் நிறைவுற்றதும் எதிர்வரும் நவம்பர் மாத இறுதியிலேயே கல்முனை மாநகர சபையிடம் இப்பூங்காவை கல்முனை மாநகர சபையிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் பெயர் சூட்டப்பட்ட இப்பூங்காவை அவரது 66வது பிறந்த தினமான ஒக்டோபர் 23 ஆம் திகதி ஏற்கனவே திட்டமிட்டபடி திறக்க வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் விரும்பியதன் பேரிலேயே இப்பூங்கா சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.








ஹைலன்ட் பால்மா , யோகட் விலை குறைப்பு


ஹைலன்ட் பால்மா , யோகட்
விலை குறைப்பு



ஹைலன்ட் பால்மா மற்றும்; யோகட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எச்.எல். திசேரா தெரிவித்துள்ளார்.   புதிய விலையின்படி 400 கிராம் நிறைகொண்ட ஹைலன்ட் பால்மா பக்கற் 40 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் பக்கற் 100 ரூபாவினாலும் யோகட் 3 ரூபாவினாலும் குறைக்கப்படும்.  

400 கிராம் ஹைலன்ட் பால் மா பக்கற்றின் விலை 285 ரூபாவாகும். ஒரு கிலோ கிராம் பக்கற் 675 ரூபா. யோகட் ஒன்றின் விலை 27 ரூபாவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மற்றுமொரு புஷ் போட்டி?

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மற்றுமொரு புஷ் போட்டி?



அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்த புஷ் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புஷ் 2016-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்ற செய்தி தற்போது  வெளியாகியுள்ளது.
 ஜார்ஜ் புஷ் 1989-ஆம் ஆண்டு முதல் 1993 வரை அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்தார்.
 அவரது மகன், ஜார்ஜ் டபிள்யு புஷ் 2001-ஆம் ஆண்டு முதல் 2009 வரை ஜனாதிபதியாக இருந்தார்.
இந்த இரு புஷ்களையடுத்து, அவர்களது குடும்பத்தின் மற்றுமொரு உறுப்பினர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. அவர் பெயர் ஜெப் புஷ்.
இவர் ஜார்ஜ் புஷ்ஷின் இளைய புதல்வர். ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் இளைய சகோதரராவார்.
ஜெப் புஷ், ஃபுளோரிடா மாகாணத்தின் ஆளுநராக, 1999-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர். இவரது மகன் ஜார்ஜ் பி. புஷ், ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில், ஜனாதிபதி தேர்தல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, குடியரசுக் கட்சி சார்பில் ஜெப் புஷ் போட்டியிட குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர் என அவரது மகன் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜெப் புஷ் போட்டியிடுவதை அவரது தந்தையும் சகோதரரும் எப்போதுமே ஆதரித்து வந்ததாக ஜார்ஜ் பி. புஷ் கூறினார். ஆனால் ஜெப் புஷ்ஷின் தாயார் இதற்கு முழு ஆதரவு தெரிவிக்கவில்லை என அறிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நவம்பர் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பிறகு, குடியரசுக் கட்சி சார்பில் ஜெப் புஷ் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.
ஜெப் புஷ்ஷின் தந்தை, ஜார்ஜ் புஷ் பதவிக் காலத்தில் ஈராக் எதிராக அமெரிக்கப் படையெடுப்பு தொடங்கியன. ஜெப் சகோதரர் ஜார்ஜ் டபிள்யு புஷ் பதவி வகித்த காலத்தில், ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் பதவி நீக்கம், அவரது மரண தண்டனை நிறைவேற்றம் நடைபெற்றன.

2001-ஆம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஒசாமா பின்லேடன் தேடப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த கால தேர்தல்களை சமூகத்துக்கான பேரம் பேசும் தேர்தலாக மாற்றாமல் முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது

இனி வரும் தேர்தலை பேரம் பேசும் தேர்தலாக மாற்றுவோம் என 

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியிருப்பதன் மூலம்

கடந்த கால தேர்தல்களை சமூகத்துக்கான பேரம் பேசும் தேர்தலாக 

மாற்றாமல் முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது

-    உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி



இனி வரும் தேர்தலை பேரம் பேசும் தேர்தலாக மாற்றுவோம் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியிருப்பதன் மூலம் கடந்த காலத்தில் எதிர் நோக்கிய தேர்தல்களை சமூகத்துக்கான பேரம் பேசும் தேர்தலாக மாற்றாமல் முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் எந்தவொரு சநதர்ப்பத்திலும் சமூகத்தின் தேவைகளையும் உரிமைகளையும் முன் வைத்து அவற்றை எழுத்து மூல பேரம் பேசுதலாக பயன்படுத்தியது கிடையாது என்பதை உலமா கட்சி தெளிவாகவே சொல்லி வருகிறது. அப்படியொரு ஒப்பந்தம் இருந்தால் அதனை பகிரங்கப்படுத்திக்காட்டுங்கள் என பல வருடங்களாகவே நாம் சவால் விட்டு வருகிறோம்.
உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் வாக்குகளை பெற்று விட்டு அவற்றை வைத்து அமைச்;சு மற்றும் பதவிகள் பற்றியே வாய்மூல ஒப்பந்தங்கள் பேசியுள்ளனவே தவிர சமூகத்தேவைகளை ஒரு பொதும் பேரம் பேசு பொருளாக மாற்றியதில்லை.
மு. காவரலாற்றில் பல தீர்க்கமிக்க தேர்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் கிழக்கு மாகாண சபை தேர்தலாகும். இதன் போது கூட அரசுக்கு முட்டுக்கொடுப்பதற்காக அந்தக்கட்சி சமூக உரிமைகளை பேரம் பேசவில்லை. ஆகக்குறைந்தது கிழக்கில் இன்னமும் வழங்கப்படாதுள்ள சுனாமி வீடமைப்புத்திட்டம், சுனாமியால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களின் வீடில்லா பிரச்சினை, கிழக்கு மௌலவிமாருக்கான ஆசிரியர் நியமனம், புல் மோட்டை முஸ்லிம்களின் காணி பிரச்சினை, கிண்ணியா முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தடை, அஷ்ரப் கிராம அடக்குமுறை, கல்முனைக்குடி மக்களின் வீடு கட்ட காணயில்லா பிரச்சினை, அரசாங்கம் பிடித்து வைத்தள்ள பள்ளிவாயல்கள் பிரச்சினை, காரைதீவு சந்தி பள்ளிவாயல் என பல பாரிய விடயங்கள் இருந்தும் அவற்றைக்கூட பேரம் பேசாமல் பதவியே சரணம் என சரணடைந்து விட்டு பின்னர் அரசைக்குறை கூறி ஒப்பாரி வைப்பதே முஸ்லிம் காங்கிரசின் வழக்கமான ஏமாற்று அரசியலாகும்.
மக்களின் வாக்குப்பலம் இல்லாத ஒரு கட்சி தனக்குரிய சேவைகளை முன்னெடுக்க அரசியல் அதிகாரம் வேண்டி பதவிகளை பெற்று சரணாகதி அரசியல் செய்யலாம். ஆனால் சமூகத்தின் உரிமைகளை பெற்றுத்தருவோம் எனக்கூறி அதிகப்படியான வாக்குகளையும் பெற்றுவிட்டு அம்மக்களை நடுத்தெருவில் விட்டு விட்டு மீண்டுமொரு தேர்தல் வரும் போது கிழக்குக்கு படையெடுத்து மீண்டும் அப்பாவி முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் திருடர் கூட்டமாகவே முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது என்பது மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் அறிவான். அத்துடன் இந்த பகிரங்க திருடர் கூட்டத்துக்கு தொடர்ந்தும் ஏமாறும் மக்களாக கிழக்கு முஸ்லிம்கள் இருப்பதை கிண்ணஸ் சாதனையாகக்கூட பதியலாம்.

ஆகவேதான் கூறுகிறோம். எதிர் வரும் தேர்தலிலும் மு. கா, சமூக உரிமைகளை பேரம் பேசாமல் ஏதோ பேசுவது போன்று சமூகத்துக்கு பேக் காட்டுதலே நடைபெறும். அவ்வாறு சமூகத்துக்கான உரிமைகளை அக்கட்சி பேரம் பேசுவதாயின் அரசியல் ரீதியாக பெற்றுள்ள அனைத்து அமைச்சுப்பதவிகள் உட்பட அனைத்து பதவிகளையும் கைவிட வேண்டும். இல்லாத வரை அக்கட்சியினால் மீண்டும் மீண்டும் முஸ்லிம்கள் முட்டாளாகி விட்டு ஒபட்பாரி வைப்பதே தலைவிதியாக இருக்கும். தெரிந்தே தவறு செய்யும் இத்தகைய மக்களுக்கு இறைவன் கூட உதவி செய்யமாட்டான் என்பதே அல்குரிஆனின் வாக்காகும்.

தென்னாபிரிக்க கால்பந்து அணியின் தலைவர் சுட்டுக் கொலை!

தென்னாபிரிக்க கால்பந்து அணியின்

தலைவர் சுட்டுக் கொலை!

தென்னாபிரிக்க கால்பந்து அணியின் தலைவர் சென்கோ மெய்வா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.   சென்கோ மெய்வாவின் வீடு ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள ஒசூருல்ஸ் நகரில் உள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக சுட்டதில் அதே இடத்தில் அவர் பலியானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.  

அவரது கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    கொலையாளிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு தொகையான  பரிசு வழங்கப்படும் என்று அந்நாட்டுப் பொலிஸார் அறிவித்து உள்ளனர். இந்த சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

குழந்தைகளைக் கொன்று விட்டு தாயும் தற்கொலை!

குழந்தைகளைக் கொன்று விட்டு

தாயும் தற்கொலை!

தனது இரு குழந்தைகளுக்கு ஆசிட்  கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது.
இலண்டனின் ருஸ்லிப் பகுதியில் வசித்து வந்தவர்தான் ஹீனா. இவருக்கு ஜாஸ்மின் (9), ப்ரிஷா (4) என இரு மகள்கள் இருந்தனர். தனது கணவரின் பெற்றோருடன் வசிக்க ஹீனாவிற்கு விருப்பம் இல்லை என கூறப்பட்ட நிலையில், அவர் தனது இரு மகளுக்கும் ஆசிட் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டார்.
இத் துயர சம்பவம் குறித்து தெரிவித்துள்ள ஹீனாவின் கணவர் கல்பேஷ், 'நானும் ஹீனாவும் எங்கள் மகள்களோடு நிம்மதியாக வாழ்ந்தோம். அவள் இறப்பதற்கு முன்பு வரை அவள் மகிழ்ச்சியாக இருந்ததாகவே நான் எண்ணினேன்.
 நாங்கள் என் பெற்றோருடன் வசித்துவந்தது ஹீனாவிற்கு பிடிக்காது என எனக்கு தெரியும். ஆனால், அவள் ஒருபோதும் தனது வாழ்வை முடித்துகொள்ளும் எண்ணத்தில் இருந்ததில்லை. இச்சம்பவம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கல்பேஷ் தெரிவித்துள்ளார்.

 ஹீனாவின் தோழியான பிரனாலி சாம்பிரே கூறுகையில், தனது மாமனார் கடுமையாக நடந்துகொள்வதாக ஹீனா தன்னிடம் தெரிவித்தாக கூறியிருக்கிறார். ஆனால், இப்படி தற்கொலை செய்து கொள்வார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, October 26, 2014

கல்முனை பொதுநூலகத்திற்கு ”ஏ.ஆர். மன்சூர் பொதுநூலகம்” எனப் பெயரிடப்பட்டு வாசகம் திரைநீக்கம்


கல்முனை பொதுநூலகத்திற்கு ”ஏ.ஆர். மன்சூர் பொதுநூலகம்

எனப் பெயரிடப்பட்டு வாசகம் திரைநீக்கம்

கல்முனை நகரில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் .ஆர்.மன்சூர் அவர்களால் கடந்த 33 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு மர்ஹும் ஏ.ஸி. எஸ். ஹமீட் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கல்முனை பொது நூலகத்திற்கு தற்போது.ஆர். மன்சூர் பொதுநூலகம்” எனப் பெயரிடப்பட்டு பெயர் பொறிக்கப்பட்ட வாசகம் 2014.10.23 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இப் பொது நூலகத்தை திறந்து வைப்பதற்கு பொது நூலகத்தின் முக்கியத்துவம் கருதி வெளிநாட்டு அமைச்சராக இருந்த .ஸி.எஸ்.ஹமீது அவர்களை இங்கு வரவழைத்து அவரைக் கொண்டு  1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.