Friday, October 10, 2014

நோபல் பரிசு பெறும் சந்தர்ப்பத்தில் இந்தியா-பாகிஸ்தான் பிரதமர்கள் பங்கேற்க வேண்டும் மலாலா யுசுப்சாய் விருப்பம்

நோபல் பரிசு பெறும் சந்தர்ப்பத்தில்
இந்தியா-பாகிஸ்தான் பிரதமர்கள் பங்கேற்க வேண்டும்
மலாலா யுசுப்சாய் விருப்பம்

அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியுடன் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யுசுப்சாய் கூறியுள்ளதாவது,
மிக இளம் வயதில் நோபல் பரிசினை பகிர்ந்து கொள்வது எனக்கு பெருமையாக உள்ளது. பெண்கள் கல்வி உரிமைக்கான எனது போராட்டம் தொடரும். என்னை பொறுத்தவரையில் ஒவ்வொரு பெண் குழந்தைகளும் கல்வி உரிமை பெற வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளும் பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

 எனக்கு  நோபல் பரிசு  அளிக்கும் போது  இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப்பும் கலந்து  கலந்து வேண்டும் என்று இரு  பிரதமர்களையும்  கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment