Sunday, November 30, 2014

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி சந்தித்துப் பேச்சு


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஜனாதிபதி சந்தித்துப் பேச்சு



சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்று மாலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் எம்.பியுமான எம்.ரி ஹஸன் அலி மற்றும் கல்முனை மேயர் நிஸாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஜனாதிபதியுடன், அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, பசில் ராஜபக்ஸ மற்றும் டலஸ் அழகபெரும ஆகியோரும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment