Friday, December 5, 2014

எரிபொருட்களின் விலைகள் குறைப்பு இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும்


எரிபொருட்களின் விலைகள் குறைப்பு
இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும்

இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

 இதற்கமைய, பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் 7 ரூபாயினாலும் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைந்துள்ளமையே இதற்கான காரணம் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.   
எனினும் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டே இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment