Thursday, January 29, 2015

அட்டாளைச்சேனையில் மாபெரும் மார்க்க சொற்பொழிவு

அட்டாளைச்சேனையில் மாபெரும்

மார்க்க சொற்பொழிவு



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ...
காலத்தின் தேவை கருதி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 31/01/2015 அதாவது சனிக்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில்
"நபி வழியும் இன்றைய நாகரீகமும்" எனும் தலைப்பில் ஏறாவூர், அல் பாக்கியதுஸ் சாலிஹாத் அரபுக்கல்லூரி மற்றும் ஜாம்மிய்யத்துல் உம்முல் பலுழ் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் M.H.M.சாதிக் (ஹாஷிமி) அவர்களால் விஷேட மாபெரும் மார்க்க சொற்பொழிவு ஒன்று நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில்
*திருமணங்களை சீரழிக்கும் இன்றைய முஸ்லிம்கள்
*ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் பிள்ளை வளர்க்கும் பெற்றோர்கள்.
*பெற்றோர்களை அக்கரையுடன் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும் இன்றைய பிள்ளைகள்...
*முஸ்லிம்களின் வெற்றி யாரைப் பின்பற்றுவதில் உண்டு?
*அந்நியர்களின் கலாச்சாரம்தான் எமது அலங்காரமா?
*அல்லாஹ்வின் உதவி நபி(ஸல்) அவர்களின் வழி முறைகளில் மட்டும்தான் இருக்கிறது
*சடவாத முன்னேற்றத்தில் ஏமாற்றம்தான் இருக்கிறது.

மற்றும் இன்னும் பல உப தலைப்புகளில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.எனவே அனைத்துப் பொதுமக்களையும் உரிய நேரத்திற்க்கு சமூகமளித்து இறுதிவரை கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஏற்பாட்டுக் குழு....

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம்(ACMYC)

பெண்களுக்கு விஷேட இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment