Wednesday, February 25, 2015

வங்காளதேசஅணிக்கு வெற்றி இலக்கு 333 ஓட்டங்கள்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015

வங்காளதேச அணிக்கு வெற்றி இலக்கு 333 ஓட்டங்கள்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில்  இன்றுபிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மெல்போர்னில் இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கு இலங்கை-வங்காளதேச அணிகள்.விளையாட ஆரப்பித்தன.
இதில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
லாஹிறு திரிமன்னே மற்றும் டில்சான் தங்களது நிதானமான ஆட்டம் மூலம் இலங்கை அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர்.24.3 ஓவரில் திரிமன்னே 52 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ருபெல் ஹுஸைனின்பந்துவீச்சில் அவுட் ஆனார். இலங்கை 50 ஓவர்கள் முடிவில்  ஒரு விக்கெட் இழப்பிற்கு 332  ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இலங்கை வீரர்கள் குமார் சங்ககாரவும், திலகரத்ன  டில்ஷானும் வங்கதேச பந்து வீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் ஓடவிட்டனர்.

சங்ககார 76 பந்துகளில் 1 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்களும், டில்ஷான் 146 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 161 ஓட்டங்களும் எடுத்துஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்காளதேச அணிக்கு வெற்றி இலக்காக 333 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை-வங்காளதேச அணிகள் இதுவரை 37 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 32-ல் இலங்கையும், 4-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றிருக்கின்றன.
ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. உலகக் கிண்ணத்தை  எடுத்துக் கொண்டால், இலங்கை அணி வங்காளதேசத்திடம் தோற்றதில்லை. சந்தித்த இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது.

வங்காளதேசத்திற்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கியுள்ள இலங்கை விக்கெட் கீப்பர் 37 வயதான  குமார் சங்கக்காரவுக்கு இது 400-வது ஒரு நாள் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 4-வது வீரர் சங்கக்கார ஆவார்.



No comments:

Post a Comment