Wednesday, February 25, 2015

இலங்கை நிதான ஆட்டம் மூலம் அடித்தளம் 39 ஓவர்கள் முடிவில் 210/1

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015

இலங்கை நிதான ஆட்டம் மூலம் அடித்தளம்
39 ஓவர்கள் முடிவில் 210/1

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் நிதான ஆட்டம் மூலம் அணிக்கு அடித்தளம் அமைத்து விளையாடி வருகின்றனர்.
தற்போது  இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வங்காளதேசம் வென்று விட்டால் அந்த அணி கால்இறுதியில் கால்பதிக்கும் வாய்ப்பு பிரகாசமாகி விடும். அதாவது இந்த பிரிவில் பெரிய அணி ஒன்று வெளியேற வேண்டிய சூழல் உருவாகலாம். போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிவருகின்றது.

திரிமன்னே மற்றும் தில்ஷன் தங்களது நிதானமான ஆட்டம் மூலம் இலங்கை அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர்.24.3 ஓவரில் திரிமன்னே 52 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ருபெல் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து சங்கரகரா இறங்கியுள்ளார். இலங்கை 39 ஓவர்கள் முடிவில்  ஒரு விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தில்சன் 97ஓட்டங்களுடனும்  குமார் சங்ககார 52 ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர்.



No comments:

Post a Comment