Tuesday, February 24, 2015

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கு இன்று தீர்ப்பு

சல்மான் கான் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கு

இன்று தீர்ப்பு


சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், பயன்படுத்தியதாகவும் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான் மீது  தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மானை வேட்டையாடியது தொடர்பாக பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் ராஜஸ்தான் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து 2007 ஆம் ஆண்டு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அப்போது சல்மான் கான் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், இதற்காக வைத்திருந்த லைசன்ஸ் காலாவதியானதாக பொலிஸார் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment