Friday, February 27, 2015

நாளை நடைபெறவிருந்த புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

நாளை நடைபெறவிருந்த புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று

பிரதேச சபை தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலை நடாத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம்  இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.   
குறித்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் நாளை 28 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருந்த நிலையில் வேட்பாளர்கள்  இருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ததை அடுத்து தேர்தலுக்கு நீதிமன்றம்  தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.   
இதற்கமைய எதிர்வரும் மார்ச் 27 ஆம்  திகதி  வரை இதற்கான தேர்தலை நடாத்த முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.    

No comments:

Post a Comment