Monday, February 2, 2015

போர் முடிந்த பின்னர், கண்டெடுக்கப்பட்ட புலிகளின் தங்கம் மற்றும் பணத்துக்கு என்ன நடந்தது?

போர் முடிந்த பின்னர், கண்டெடுக்கப்பட்ட
புலிகளின் தங்கம் மற்றும் பணத்துக்கு என்ன நடந்தது?

இது குறித்து அரசு விரிவான விசாரணைகளை நடத்தப்படும்

விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து புதிய அரசு விசாரணைகளை நடத்தும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.    
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும். அவர்களின் நிதி மற்றும் முன்னைய அரசுடன் வைத்திருந்த தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்படும்.   விடுதலைப் புலிகளின் நிதிக்கு என்ன நடந்தது என்பதை அரசு  அறிந்து கொள்ள விரும்புகிறது. ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக இது இடம்பெறும்.  
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக முன்னைய அரசு எப்போதும் எம்மீது குற்றம்சாட்டி வந்தது. ஆனால், அவர்கள் தான் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

விடுதலைப்புலிகளின் கப்பல்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டது, போர் முடிந்த பின்னர், கண்டெடுக்கப்பட்ட புலிகளின் தங்கம் மற்றும் பணத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.   வடக்கிலுள்ள மக்களிடம் இருந்து இதுதொடர்பான ஆதாரங்கள் திரட்டப்படும். இது ஒரு பெரியளவிலான விசாரணையாக இருக்கும்.   கடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி வடக்கிலுள்ள மக்களை வாக்களிக்காமல் தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment