Wednesday, April 1, 2015

சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல் ஏமன் பால் பண்ணையில் 35 பேர் பலி!

சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல்
ஏமன் பால் பண்ணையில் 35 பேர் பலி!

ஏமனின் ஹொடெய்டா மாகாணத்தில் சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் பால் பண்ணைத் தொழிலாளர்கள் 35 பேர் பலியானதாக அந்த மாகாண ஆளுநர் ஹசன் அல்-ஹை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர்  மேலும்கூறியதாவது:

ஏமன் கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதலின்போது, ஹொடெய்டா மாகாணத்திலுள்ள ஒரு பால்பண்ணையின் மீது குண்டு விழுந்தது.அது கிளர்ச்சியாளர்கள் வீசிய தொலைதூர எறிகுண்டாகவும் இருக்கலாம். அந்த குண்டு வெடித்ததில் பால் பண்ணையிலிருந்த 35 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment