Sunday, May 31, 2015

அரச ஊழியர்களின் பொறுப்புக்களும் சேவை பெறுநர்களின் சிறப்புரிமைகளும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை வெளியீடு

அரச ஊழியர்களின் பொறுப்புக்களும்

சேவை பெறுநர்களின் சிறப்புரிமைகளும்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை வெளியீடு


உடன் அமுலுக்கு வரும் வகையில், அரச ஊழியர்களுக்கு நிபந்தனைகள் அடங்கி பட்டியல் ஒன்று அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
சகல அரசாங்க திணைக்களங்கள், காரியாலயங்கள் மற்றும் சபைகளுக்கு அமைச்சினால் இது தொடர்பிலான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை (இலக்கம் 11/2015) ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின் பிரகாரம்:-

மக்கள் தினம் என்று ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் சகல அரச ஊழியர்களும் காரியாலத்துக்கு கட்டாயம் சமூகமளிக்கவேண்டும்.

மக்கள் அனுப்புகின்ற கடிதங்களுக்கு ஒருவாரகாலத்துக்குள் பதில் அனுப்புவதாக அறிவிக்கவேண்டும்

அத்துடன் ஒரு மாதத்துக்குள் அக்கடிதத்துக்கு கட்டாயம் பதில் அனுப்பிவைத்தல் வேண்டும்.

மக்கள் கடிதங்களுக்கு பதில் அனுப்பும் போது, கேள்விகள் கேட்கப்பட்டுள்ள மொழியிலேயே பதில் அனுப்பிவைத்தல் வேண்டும்.

பெரும் நிதியை செலவழித்து மற்றும் அரச சொத்துக்களை பயன்படுத்தி அரச வைபவங்கள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிபந்தனைகளை மீறுகின்ற அரச ஊழியர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment