Monday, July 27, 2015

மாலைதீவின் 50வது சுதந்திரதின விழா விசேட அதிதியாக இலங்கை ஜனாதிபதி கலந்துகொண்டார்


மாலைதீவின் 50வது சுதந்திரதின விழா
விசேட அதிதியாக இலங்கை ஜனாதிபதி கலந்துகொண்டார்

மாலைதீவின் 50வது சுதந்திரதின விழா நேற்று மாலை (26) மாலைதீவின் தலைநகர் மாலேயில் நடைபெற்றது. விசேட அதிதியாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.
நேற்று பிற்பகல்  மாலே தலைநகரைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதையும் செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
ஜனாதிபதியுடன் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

இலங்கையும் மாலைத்தீவும் 1965 ஆம் ஆண்டு முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. இந்த ஆண்டு இரு நாடுகளுக்கிடையேயும் முறையான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.









No comments:

Post a Comment