Wednesday, July 29, 2015

யாகூப் மேமன் இன்று காலை தூக்கிலிடப்பட்டார்


யாகூப் மேமன் இன்று காலை தூக்கிலிடப்பட்டார்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி யாகூப் மேமன் அவருடைய பிறந்த நாளான இன்று காலை தூக்கிலிடப்பட்டார்.
யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை அடுத்து மும்பையில் அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக அவரது குடும்பத்தினர் அவருக்கு பிறந்த நாள் கேக் மற்றும் வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்தனர். இது குறித்து யாகூப்பிடம் தெரிவித்தபோது எவ்வித மாற்றத்தையும் தெரிவிக்கவில்லை என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாகூப் மேமன், கடந்த ஆண்டு அரசியல் பொருளாதாரத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில், அந்த பட்டத்தை வாங்காமலேயே தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.
இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை வழியாக 2010ஆம் ஆண்டு இலக்கியத்தில் பட்டம் பெற்ற யாகூப், அரசியல் பொருளாதாரத்திலும் 2014ஆம் ஆண்டு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றார்.

இந்த நிலையில், யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, அவர் பிறந்த நாளான ஜூலை இன்று 30ம் திகதியன்று தூக்கிலிடப்பட்டார்.

யாகூப் மேமனுக்கு நாளை தூக்கு நாக்பூர் சிறைச்சாலைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறந்த நாளிலேயே தூக்கு தண்டனை முதுகலை பட்டத்தைக் கூட பெற முடியாத பரிதாப நிலை


யாகூப் மேமனுக்கு நாளை தூக்கு

நாக்பூர் சிறைச்சாலைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு

பிறந்த நாளிலேயே தூக்கு தண்டனை
முதுகலை பட்டத்தைக் கூட பெற முடியாத பரிதாப நிலை

மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களில் ஒருவரான யாகூப் மேமனின் கருணை மறுசீராய்வு மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று தள்ளுபடியானதை அடுத்து அவருக்கு தூக்கு தண்டனை உறுதியானது. நாளை காலை நாக்பூர் சிறையில் அவர் துாக்கிலிடப்படுகிறார். இதையொட்டி நாக்பூர் சிறைச்சாலை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாகூப் மேமன், கடந்த ஆண்டு அரசியல் பொருளாதாரத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில், அந்த பட்டத்தை வாங்காமலேயே தூக்கிலிடப்பட உள்ளார்.
இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை வழியாக 2010ஆம் ஆண்டு இலக்கியத்தில் பட்டம் பெற்ற யாகூப், அரசியல் பொருளாதாரத்திலும் 2014ஆம் ஆண்டு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றார்.
இந்த நிலையில், யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, அவர் பிறந்த நாளான ஜூலை 30ம் திகதியன்று தூக்கிலிடப்பட உள்ளார்.



பிறந்த மண்ணை வந்தடைந்தது அப்துல் கலாம் உடல் மக்கள் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் உடல், ராமேசுவரத்தில் இஸ்லாமிய முறைப்படி நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது


பிறந்த மண்ணை வந்தடைந்தது அப்துல் கலாம் உடல்

மக்கள் கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் உடல், ராமேசுவரத்தில் இஸ்லாமிய முறைப்படி

நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது

ராமேசுவரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் இந்திய  குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராமேசுவரத்தில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மதுரையில் இருந்து மண்டபம் கொண்டு செல்லப்பட்ட கலாம் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனத்தில் கலாம் உடல் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.
வழி நெடுகிலும் சாலையில் இரு புறங்களிலும் பொதுமக்கள் குவிந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
ராமேசுவரத்தில் பஸ் நிலையம் அருகே மைதானத்தில் கலாமின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தில் உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களுக்கும் நாளை விடுமுறை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை,''அப்துல் கலாம் அடக்கம் செய்யப்படும் இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரிக்கு அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும்'' என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ..எம். கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் கலாம் திடீரென மயங்கி விழுந்தார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர், உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், கலாம் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
அப்துல் கலாமின் உடல் மேகால யாவில் இருந்து நேற்று காலை டில்லிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கலாமின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி அவரது உடல் ராணுவ விமானம் மூலம் இன்று (புதன் கிழமை) மதுரை கொண்டு வரப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் ஆளுநர் ரோசய்யா, கலாம் உடலைப் பெற்றுக் கொண்டார். அவரது உடலுக்கு ஆளுநர் ரோசய்யா, அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.
மறைந்த அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அன்னாரது இறுதிச்சடங்கு நடைபெறும் நாளான 30.7.2015 அன்று அரசு விடுமுறை வழப்பட்டுள்ளது.
அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
அப்துல் கலாமின் உடல், ராமேசுவரத்தில் இஸ்லாமிய முறைப்படி வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து கலாமின் பேரன் ஷேக் சலீம் கூறும்போது, "கலாமின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் வேகமாக செய்து வருகிறது.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆந்திரா உட்பட 6 மாநிலங்களின் முதல்வர்கள், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.







பட்டியலில் உள்ளடக்கப்படாத எவரும் தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக முடியாது. தேர்தல்கள் ஆணையாளர் உறுதிபடத் தெரிவிப்பு

பட்டியலில் உள்ளடக்கப்படாத எவரும்
தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக  முடியாது.

தேர்தல்கள் ஆணையாளர் உறுதிபடத் தெரிவிப்பு


தேர்தலில் போட்டியிடாத அல்லது தேசியப் பட்டியலுக்கான பெயர் பட்டியலில் உள்ளடக்கப்படாத எவரையும் தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக நியமிக்க முடியாது. இதனை இம்முறை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும், ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இச்சந்திப்பில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட்டும் கலந்துகொண்டிருந்தார்.
இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டும் வகையில் சமூகவலைத்தளங்கள் மூலம் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மதத் தலைவர்கள் மதரீதியான பிரசங்கங்களை மேற்கொள்ளும்போது வேட்பாளர் ஒருவரை ஊக்குவிக்கும் வகையில் கருத்துத் தெரிவிப்பது தேர்தல் விதிகளை மீறும் செயற்பாடு என்றும் அவர் கூறினார்.
மதத் தலைவர்கள் பலர் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதால் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்த முடியாதுள்ளது. அதேநேரம், குறித்த வணக்கஸ்தலத்தின் பிரதான மதகுரு தேர்தலில் போட்டியிட்டாலும் அந்த வணக்கஸ்தலத்தில் தேர்தல் அலுவலகத்தை அமைக்க முடியாது. அதேநேரம், தேர்தல் விதிகளை மீறும் வகையில் வீதிகளில் வேட்பாளரின் பெயர்கள் மற்றும் இலக்கம் என்பவற்றை வரைபவர்களுக்கு எதிராக பொலிஸாரின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்திருப்பதுடன், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கட்சி செயலாளர்களுக்கு அறிவித்து வருவதாகவும் கூறினார்.
தேர்தல் விதிகளை மீறும் வகையிலான பிரசாரங்கள் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், சுவரொட்டிகள், பனர்கள் மற்றும் பதாகைகளைக் கொண்டு பிரசாரங்களை முன்னெடுக்கும் இறுதித் தேர்தல் இதுவாகவே இருக்கும். சுவரொட்டிகள், பனகர்கள் மற்றும் கட்டவுட்டுக்களை நீக்கும் பணிகளை பொலிஸார், பணியாளரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பொலிஸ் திணைக்களத்துக்கு 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் பணத்தை பயன்படுத்தி போஸ்டர்களை அகற்றும் இறுதித் தேர்தல் இதுவாகவே இருக்கும் என நம்புகிறோம்என்றார்.



Tuesday, July 28, 2015

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் நாடாளுமன்றம் சென்றால்காதை அறுப்பேன் அமைச்சர் ஹக்கீம் சவால்! நான் நாடாளுமன்றம் சென்றால் ஹக்கீம் வீடு செல்லத் தயாரா? இஸ்மாயிலும் சவாலுக்கு சவால்!

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில்

நாடாளுமன்றம் சென்றால்காதை அறுப்பேன்

அமைச்சர் ஹக்கீம் சவால்!

நான் நாடாளுமன்றம் சென்றால்

ஹக்கீம் வீடு செல்லத் தயாரா?

இஸ்மாயிலும் சவாலுக்கு சவால்!




அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக இம்முறை திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தனது பதவியை இராஜினாமா செய்யாமல் தேர்தல் வேட்பாளர் படிவத்தில் ஒப்பமிட்டுள்ளார். இதற்காக வழக்கு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவர் தற்செயலாக தெரிவானாலும் நாடாளுமன்றம் செல்ல முடியாது. அவ்வாறு செல்வாராயின் எனது காதினை அறுப்பேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
.ஐக்கிய தேசிய முன்னணியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் வெற்றிக்காக, அட்டாளைச்சேனை பிரதான வீதி தபாற்கந்தோருக்கு அருகாமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பிரும் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான .எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு இம்முறை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும். இதில் எந்தவிதமான சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. இவை கட்சியின் தலைமையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களாகும்.
இம்முறை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நாடாளுமன்ற தேர்தல்களுக்காக வேட்பாளர்களை தெரிவு செய்ததில் பல விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்ற நிலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லா வேட்பாளர்களும் புதியவர்களாகவும் அம்பாறை மாவட்டத்தில் பழைய முகங்களா? என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்துள்ளது. நிந்தவூருக்கு தேர்தல் மூலமாகவும் தேசியப்பட்டியல் ஊடாகவும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழமையாக வழங்கப்பட்டு வந்துள்ளதாகவும் விமர்சிக்கின்றனர்.
திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தனது பதவியை இராஜினாமா செய்யாமல் தேர்தல் வேட்பாளர் படிவத்தில் ஒப்பமிட்டுள்ளார். இதற்காக வழக்கு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவர் தற்செயலாக தெரிவானாலும் நாடாளுமன்றம் செல்ல முடியாது. அவ்வாறு செல்வாராயின் எனது காதினை அறுப்பேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை.  இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதேவேளை. நான் நாடாளுமன்றம் சென்றால் ஹக்கீம் வீடு செல்லத் தயாரா? இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் சவால்விடுத்துள்ளார்.
அமைச்சரின் சவால் குறித்து வேட்பாளர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் பாராளுமன்றம் சென்றால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வீடு செல்லத் தயாரா ? எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வேன் என்பது உறுதியாகி விட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கருத்து வெளியிட்டுள்ளார் .
இந்த மாவட்ட மக்களின் நாடித் துடிப்பை நேரடியாக வந்து பார்த்து விட்டே அவர் இந்த கருத்துக்களை தெரிவிக்கிறார். எனது வெற்றியினை முறியடிக்க அவர் கடும் பிரயத்தனமும் எடுத்து வருகிறார். அதன் பின்னணியிலேயே நான் வென்றாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது என்கின்ற புதுக்கதையினை அவர் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துள்ளார்.
அவ்வாறாயின் நான் பாராளுமன்றம் சென்றால் ஹக்கீம் தனது அரசியல் பதவிகளைத் துறந்து வீடு செல்லத் தயாரா? என்று நான் சவால் விடுக்க விரும்புகிறேன்.
சட்டத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் நான் சட்ட ரீதியற்ற முறையில் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அவர் நீதிமன்றம் செல்ல முடியும். நானும் அதற்கு தயாரகவுள்ளேன். ஆனால் நீதிமன்றம் செல்லாமல் மேடைகளில் பேசி மக்களை குழப்புகிறார். இதன் மூலம் வீண் வதந்திகளை பரப்பி மக்கள் காங்கிரஸிற்கு அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றார்.

இந்த வதந்தியினை அம்பாறை மாவட்ட மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். ஆனால் இவரது இந்த உரை மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனம் பெறுவதும் நான் பாராளுமன்றம் செல்வதும் உறுதியாகி விட்டதையே பறைசாற்றுகிறதுஎன்றும் தெரிவித்துள்ளார்ர்.

Monday, July 27, 2015

அப்துல் கலாமின் உடல் ஷில்லாங்கிலிருந்து குவகாத்தி கொண்டு செல்லப்பட்டது

அப்துல் கலாமின் உடல்
ஷில்லாங்கிலிருந்து குவகாத்தி கொண்டு செல்லப்பட்டது


மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில், நேற்றிரவு மாரடைப்பால் காலமான முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் உடல், ராணுவ ஹெலிகாப்டரில் ஷில்லாங்கிலிருந்து, அசாம் மாநிலம் குவகாத்தி கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.





அப்துல் கலாம் திடீர் மறைவு அன்னாரின் வாழ்க்கைப் பயணம்...

அப்துல் கலாம் திடீர் மறைவு

அன்னாரின் வாழ்க்கைப் பயணம்...




இந்தியக் குடியரசு முன்னாள் தலைவரும், உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்த அணு விஞ்ஞானியுமான டாக்டர் ..ஜெ. அப்துல் கலாம் (வயது83) திங்கள்கிழமை காலமானார்.
மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (..எம்.) திங்கள்கிழமை மாலை சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அப்துல் கலாம், அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவாலும், வயோதிகப் பிரச்னைகளாலும் அப்துல் கலாம் பாதிக்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும், கல்லூரி மாணவர்களிடையேயான பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும், கருத்தரங்குகளிலும் தொடர்ந்து அவர் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில், மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் திங்கள்கிழமை அவர் கலந்து கொண்டார். அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள பெத்தானி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அப்துல் கலாமை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
""அவரது உடலை இன்று செவ்வாய்க்கிழமை காலையில் அண்டை மாநிலமான அஸ்ஸாமின் குவாஹாட்டியில் இருந்து டில்லிக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலாம், தனது வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு போராட்டங்களையும், தடைகளையும் தாண்டி இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்து, அந்தப் பதவியையே அலங்கரித்தவர்.
கலாம் சிறுவனாக இருந்தபோது அவரது குடும்பத்தினர் பத்திரிகை ஒன்றின் முகவராக செயல்பட்டனர். அப்போது, ராமேசுவரத்தில் குறித்த  நாளிதழை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கும் பணியை கலாம் மேற்கொண்டார்.
 நாட்டின் பல்வேறு ஏவுகணைத் திட்டங்களுக்கு அவர் ஆற்றிய பங்கினைப் பாராட்டி இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கலாமுக்கு 1997-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக, 1981-ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூஷண் விருதும், 1990-ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் அவருக்கு கிடைத்தது.
அப்துல் கலாம் எழுதிய "அக்னிச் சிறகுகள், "இந்தியா 2020', "எழுச்சி தீபங்கள்' ஆகிய புத்தகங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவையாகும்"உறக்கத்தில் வருவது அல்ல கனவு; உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு' என்ற தாரக மந்திரத்தை இந்திய இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தவர் கலாம்தனது வாழ்நாள் முழுவதும் இளைஞர்களின் உந்து சக்தியாக வாழ்ந்த அப்துல் கலாம், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே தனது இன்னுயிரை நீத்துள்ளார். அவரது மறைவு இந்தியர்கள் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் அனைத்து இந்தியர்களையும் தனது உடன் பிறந்தவர்களாக போற்றி வாழ்ந்தார் அப்துல் கலாம். குடியரசுத் தலைவராக இருந்தபோது தன்னைச் சந்திக்க வரும் குடும்ப உறவினர்கள் அதிக நாட்கள் தனது மாளிகையில் தங்கியிருக்காமல் ஊர் திரும்ப வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தார். தனது பதவியை பயன்படுத்தி உறவினர்கள் தவறு செய்துவிடக் கூடாது என்பதில் அந்த அளவுக்கு கடைசி வரை உறுதியுடன் இருந்தார்.
 பதவிக்காலம் முடிந்த பிறகு டில்லியில் அரசு பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்ட போது, அங்கு தமது உதவியாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு இறுதி நாட்களைக் கழித்தார். அப்போதும் உறவினர்களோ, நண்பர்களோ அங்கு வந்து உரிமை கொண்டாடுவதை அவர் விரும்பியதில்லை.
 1931, அக்டோபர் 15: தமிழகத்தின் ராமேசுவரத்தில், ஜெயினுலாப்தீன்- ஆஷியம்மா தம்பதியின் மகனாக அப்துல் கலாம் பிறந்தார்.
 1954: திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றார்.
 1960: சென்னை எம்ஐடி-யில் விமானப் பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றார். அதே ஆண்டில் டிஆர்டிஓ விஞ்ஞானியானார்.
 1969: இஸ்ரோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார்.
 1980: கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ரோகிணி செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியதன்மூலம், விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
 1981: பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
 1980-1990: ஒருங்கிணைந்த ஏவுகணை அபிவிருத்தித் திட்டம், கலாம் தலைமையில் வளர்ச்சி பெற்றது. அக்னி, பிருத்வி ஏவுகனைகள் உருவாக்கப்பட்டன.
 1990: பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.
 1992-1999: டிஆர்டிஓ அமைப்பின் செயலாளராக, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக கலாம் பணியாற்றினார்.
 1997 நவம்பர் 26: பாரத ரத்னா விருது கலாமுக்கு வழங்கப்பட்டது.
 1998 மே 13: ராஜஸ்தானின் பொக்ரானில் அணுகுண்டு சோதனை கலாம் தலைமையில் நடைபெற்றது.
 1999-2001: பிரதமர் வாஜ்பாயின் முதன்மை அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றினார்.
 2002, ஜூலை 25: 11-ஆவது குடியரசுத் தலைவரானார்.
 2007 ஜூலை 25: குடியரசுத் தலைவர் பதவிக்காலம் நிறைவு.
 2007-2015: நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இளைஞர்கள், மாணவர்களிடையே கல்வி, விழிப்புணர்வுப் பணி.
 2015 ஜூலை 27: மேகாலயத்தின் ஷில்லாங்கில் காலமானார்.