Wednesday, August 5, 2015

லிபியாவில் படகு விபத்து 25 பேர் பலி; பலர் மாயம்


லிபியாவில் படகு விபத்து
25 பேர் பலி; பலர் மாயம்

லிபியாவிலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பியாவிற்கு பிழைப்பு தேடி 600 க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, லிபியா அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும். 400 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் 3 கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், இத்தாலி, மால்டா நாடுகளின் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன..
இதே பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 படகுகள் விபத்துக்குள்ளானதில், 450 பேர் பலியாகினர். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து இதுவரை லிபியா, இத்தாலி இடையிலான கடற்பகுதியில் நிகழ்ந்த படகு விபத்துகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் பலியாகியுள்ளனர்.

ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரணமாக பலர் பிழைப்பு தேடி ஐரோப்பாவிற்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ளும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment