Monday, August 31, 2015

பிரதமரின் உறுதிமொழிப்படி சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை பிரகடனப்படுத்தப்பட வேண்டும்! அக்கிராசனத்தில் இருந்து அப்துல் மஜீத் கோரிக்கை!!

பிரதமரின் உறுதிமொழிப்படி
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை பிரகடனப்படுத்தப்பட வேண்டும்!

அக்கிராசனத்தில் இருந்து அப்துல் மஜீத் கோரிக்கை!!

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வழங்கிய உத்தரவாதம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான .எல்.அப்துல் மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை (2015-08-31) பிரதி முதல்வர் .எல்.அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பொது விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களது கருத்துரையின் போதே அவர் ந்த  வேண்டுகளை விடுத்துள்ளார்
அங்கு அவர் மேலும் பேசுகையில் தெரிவித்ததாவது;;
நடந்து முடிந்த பொதுத் தேர்தல் பிரசாரத்திற்காக கல்முனைக்கு வருகை தந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது உரையின்போது தமது அடுத்த புதிய அரசாங்கத்தில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
சாய்ந்தமருது மக்களின் 25 வருட கால அபிலாஷையான அந்த உள்ளுராட்சி சபையை அவர் வாக்களித்தவாறு பிரகடனப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நான் இந்த மாநகர சபையின் அக்கிராசனத்தில் இருந்து கோரிக்கை விடுக்கின்றேன்.

அதுபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கல்முனை பிரசாரக் கூட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் வரை புகையிரத சேவை விஸ்தரிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதனையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இப்பிராந்திய சமூகங்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றேன்என்றும் குறிப்பிட்டார்.

சவூதி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 11 பேர் பலி, 219 பேர் காயம்

வூதி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

11 பேர் பலி, 219 பேர் காயம்

வூதிஅரேபியாவின் கோபார் நகரில் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 219 பேர் காயமடைந்தனர்.
வூதியின் கிழக்கு நகரான கோபாரில் உலகிலேயே மிகப் பெரிய ஆயில் நிறுவனமான வூதி அராம்கோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் 77 நாடுகளைச் சேர்ந்த சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர்.

இவர்களுக்கென தனியாக தங்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மேல்மாடிக்கும் பரவியது. தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு தங்கியிருந்தவர்கள் உயிரை கையில் பிடித்தவாறு வெளியில் ஓடினார். ஆனாலும், தீயில் கருதி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 219 காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.

Sunday, August 30, 2015

இஸ்ரேல் இராணுவத்தை எதிர்த்து துணிச்சலாகப் போராடிய பாலஸ்தீனிய சிறுவன்!

இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து
துணிச்சலாகப் போராடிய பாலஸ்தீனிய சிறுவன்

இஸ்ரேல் ராணுவம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை எதிர்த்து சிறுவன் ஒருவன் துணிச்சலாக போராடிய காட்சியும் அந்த சிறுவனை இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கடுமையாக தாக்கி அடக்குமுறைக்கு உட்படுத்தும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறதுபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் மத்திய கிழக்கு பகுதியின் மேற்கு கரை பகுதி உள்ளது. அங்கு இஸ்ரேல் நாட்டவர்கள் அத்துமீறி குடியேறி வருகின்றனர். இதனைக் கண்டித்தும் ராணுவ குவிப்பைக் கண்டித்தும் அப்பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு கரையில் உள்ள நபி சாலே பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது தனது குடும்பத்துடன் சிறுவன் ஒருவனும் கலந்துகொண்டான். அப்போது அந்த சிறுவனை பிடித்து இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் சிறுவனை அடக்குமுறைக்கு உட்படுத்தும் காட்சியும் அதனையும் பொருட்படுத்தாமல் ராணுவத்திற்கு எதிராக அந்த சிறுவனும் கிராமத்தினரும் போராடும் காட்சியும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த காட்சி சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



இலங்கைக்கு கப்பலை நன்கொடையாக அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

இலங்கைக்கு கப்பலை நன்கொடையாக 

அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

இந்தியாவுக்குச் சொந்தமான .சி.ஜி. வராஹா என்ற போர்க்கப்பலை இலங்கை   கடற்படைக்கு இந்தியா இலவசமாக வழங்கியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் இலங்கைக்கு இந்தியா கப்பலைக் கொடையாக அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: -
இலங்கை ஒருபோதும் நமக்கு விசுவாசமாக இருந்ததில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் அந்நாட்டுக்கு இந்திய மத்திய அரசு பல உதவிகளை வழங்கி வருகிறது. இத்தகைய உதவிகளால் பாதிக்கப் படுவது தமிழ்நாடு தான் என்ற போதிலும், அது தொடர்பாக தமிழக அரசிடமும், அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்துவதோ, கருத்துக் கேட்பதோ கிடையாது. கச்சத்தீவை தாரை வார்த்ததில் தொடங்கி, 2009 ஆம் ஆண்டு இறுதிப் போருக்கு ஆயுதம் வழங்கியது வரை மத்திய அரசின் அணுகுமுறை இலங்கைக்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும் தான் இருந்து வருகிறது.
இப்போது கூட .சி.ஜி. வராஹா போர்க்கப்பலை இலங்கைக்கு தாரை வார்ப்பதில் வெளிப்படையான அணுகுமுறை கடைபிடிக்கப்படவில்லை. இந்த விஷயம் தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தெரிந்தால்  கடும் எதிர்ப்பு எழும் என்பதால், அந்த கப்பலை இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு இரகசியமாக கொண்டு சென்று ஒப்படைத்து விட்டு திரும்பியுள்ளனர். இப்போது கூட இந்த செய்தியை இலங்கை பாதுகாப்புத்துறை தான் வெளியிட்டிருக்கிறதே தவிர, இந்திய பாதுகாப்புத்துறை வாய் பேசாமல் தான் இருந்து வருகிறது.
இலங்கைக்கு இந்திய போர்க்கப்பல் .சி.ஜி. வராஹா தரப்பட்டதை சாதாரண உதவியாக கருதி விட்டு விட முடியாது. இதன் பின்னணியில் பல துரோகங்களும், ரகசியங்களும் அடங்கியிருக்கின்றன. இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான .சி.ஜி. வராஹா, .சி.ஜி. விக்ரஹா ஆகிய இரு போர்க்கப்பல்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. எஸ்.எல்.என் சாகரா, எஸ்.எல்.என் சயூரளா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த இரு போர்க்கப்பல்கள் தான் இறுதிப் போரில் அப்பாவி ஈழத்தமிழர்களை படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டன.
அப்போதே இந்த போர்க்கப்பல்களை திரும்பப்பெற வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின் தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பை அடக்கும் வகையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட  2 போர்க் கப்பல்களும்  திரும்பப் பெறப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
அதன்படி பெறப்பட்ட .சி.ஜி. விக்ரஹா புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே வழங்கப்பட்டது.சி.ஜி. சரயு என்ற இந்திய போர்க்கப்பலும் 2010 ஆம் ஆண்டில் இலங்கைக்கு இலவசமாக வழங்கப் பட்டது. அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்ட .சி.ஜி. வராஹா போர்க் கப்பலை இந்தியா இப்போது இலவசமாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதைப் புதுப்பிப்பதற்காக செலவிடப்பட்ட பல கோடி ரூபாயை இந்திய அரசே வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒதுபோதும் துணையாக இருக்கப் போவதில்லை. ஏற்கனவே ஈழத் தமிழர்களை படுகொலை செய்வதற்காக இந்த கப்பலை பயன்படுத்திய இலங்கை, இப்போது வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்வது, தாக்குவது, சுட்டுக் கொல்வது போன்ற மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவதற்கு தான் பயன்படுத்தப் போகிறது.

உலகில் சொந்த நாட்டு மீனவர்களை தாக்க அடுத்த நாட்டு கடற்படைக்கு ஆயுதங்களை வழங்கிய அவப்பெயர் தான் இந்தியாவுக்கு ஏற்படப்போகிறது. இந்த பழியை தடுக்க வேண்டுமானால், இதுவரை இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட 3 போர்க்கப்பல்கலையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.என கூறியுள்ளார்.

"சாகரா' ("வராஹா') ரோந்துக் கப்பல் இந்தியா இலவசமாக இலங்கைக்கு வழங்கியது

75 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம் கொண்ட
"சாகரா' ("வராஹா') ரோந்துக் கப்பல்
இந்தியா இலவசமாக இலங்கைக்கு வழங்கியது

இலங்கைக் கடற்படைக்கு குத்தகை அடிப்படையில் சேவையாற்றி வந்த இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான "வராஹா' ரோந்துக் கப்பல், இலங்கைக்கே முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வில், "வராஹா' கப்பல் முறைப்படி இலங்கைக்கு கையளிக்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை காட்டி வரும் ஈடுபாட்டைப் போற்றும் வகையில், இந்த ரோந்துக் கப்பல் இலங்கைக்கு இலவசமாக  கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 1992-ஆம் ஆண்டில் கடலோரக் காவல் படைக் கண்காணிப்புப் பணிக்காக இந்த ரோந்துக் கப்பல் தயாரிக்கப்பட்டது. 75 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம் கொண்ட இந்தக் கப்பல் தொடக்கத்தில் இந்தியக் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டது. 2006-ஆம் ஆண்டில் இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க இந்தக் கப்பல் இலங்கைக் கடற்படையின் சேவைக்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்தக் கப்பலுக்கு "சாகரா' என இலங்கைக் கடற்படை பெயர் சூட்டியது. இலங்கை உள்நாட்டுப் போரின் போதும், தற்போது வரையிலும் அந்த நாட்டுக் கடல்சார் கண்காணிப்பு, எல்லை தாண்டிய பயங்கரவாதத் தடுப்பு ஆகிய நடவடிக்கைகளில் இந்தக் கப்பல் இலங்கை கடற்படைக்கு பேருதவியாக இருந்தது.
இந்த நிலையில், குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த ரோந்துக் கப்பலை இலங்கை நாட்டுக்கே இலவசமாக வழங்க மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு முடிவு செய்தது. இதையடுத்து, "வராஹா' என பெயர் சூட்டப்பட்டு முறைப்படி இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இலவசமாக இந்தியா அளித்துள்ள ரோந்துக் கப்பலின் செயல்பாடு பற்றிய தகவல் முன்கூட்டியே வெளியே தெரிந்தால், அது இலங்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் என மத்திய அரசு கருதியதாகத் தெரிகிறது. அதனால், இந்த விவரம் கடைசி வரை இரகசியமாகவே டில்லியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி, பிரதமர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா பெரஹரவை பார்வையிட்டனர்

ஜனாதிபதி, பிரதமர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
கண்டி ஸ்ரீ தலதா பெரஹரவை பார்வையிட்டனர்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நேற்று 29 ஆம் திகதி சனிக்கிழமை மாலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா பெரஹரவை பார்வையிட்டனர்

ஜனாதிபதி அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இச்சந்தரப்பத்தில் பங்குபற்றியிருந்தார்கள்.








Saturday, August 29, 2015

சம்மாந்துறையில் "சீதன ஒழிப்பு" ஆர்ப்பாட்டம்


சம்மாந்துறையில் "சீதன ஒழிப்பு" ஆர்ப்பாட்டம்

சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் இளைஞர்கள் சிலரால் கடந்த வெள்ளிக்கிழமை "சீதன ஒழிப்பு" ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இது சம்மாந்துறை ஊர் அல்ல இதற்கு மாற்றமாக "சீதனத்துறை" என்ற அவப்பெயரைக் கொண்டிருக்கும் எமதூரில் இஸ்லாமிய முறையில் பெண்களுக்குரிமையான "மஹர்" கொடுத்து திருமணம் செய்ய வேண்டும் என்றும் ..... சீ-தனம் / கைக்கூலி வாங்கியவர்கள் அதைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்  எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோமிட்டார்கள்.


தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இறுதிப் பட்டியல் ?

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை
இறுதிப் பட்டியல் ?


தேசிய அரசாங்கத்தின் முழுமையான அமைச்சரவை மற்றும் அதற்கான அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இதில் 10 முஸ்லிம் மற்றும் 5 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர். எனினும் இவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள அமைச்சுக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
எதிர்வரும் 2 ஆம் திகதி அல்லது  4 ஆம் திகதியளவில் அமைச்சர்களின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

முஸ்லிம் அமைச்சர்கள் விபரம்:
01. றிஷாட் பதியூதீன் -கெபினட் அமைச்சர்
02. கபீர் ஹாஷீம்கெபினட் அமைச்சர்
03. ..எம்.பௌஸிகெபினட் அமைச்சர்
04.ரவூப் ஹக்கீம்கெபினட் அமைச்சர்
05. மொஹமட் ஹலீம்கெபினட் அமைச்சர்
06. பைஸர் முஸ்தபாஇராஜாங்க அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர்
07. அமீர் அலிஇராஜாங்க அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர்
08. மொஹமட் நவவிபிரதி அமைச்சர்
09. மொஹமட் மஹ்றூப்பிரதி அமைச்சர்
10. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்பிரதி அமைச்சர்

தமிழ் அமைச்சர்கள் விபரம்:
01. பீ.திகாம்பரம் -கெபினட் அமைச்சர்
02. தொண்டமான் -கெபினட் அமைச்சர்
03. டீ.எம்.சுவாமிநாதன்புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர்
04. ராதா கிருஷ்னன்பிரதி அமைச்சர்
05. வடிவேல் சுரேஷ்பிரதி அமைச்சர்


ஏனைய அமைச்சர்ககள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதிமைச்சர்களின் பெயர் விபரங்கள்,

ரணில் விக்ரமசிங்க
ரவி கருணாநாயக்க
சஜித் பிரேமதாஸ
தயா கமகே
அகில விராஜ் காரியவசம்
லக்ஷ்மன் கிரிஎல்ல
சுஜுவ சேனசிங்க
ஹர்ஷ டி சில்வா
பாட்டலி சம்பிக்க ரணவக்க
விஜேதாஸ ராஜபக்ச
ருவண் விஜேவர்தன
ரஞ்சன் ராமநாயக்க
அஜித் பீ பெரேரா
அர்ஜுன ரணதுங்க
ஜோன் அமரதுங்க
வசந்த சேனாநாயக்க
ரஞ்சித் மத்துமபண்டார
ஹரின் பெர்ணான்டோ
வசந்த அலுவிஹார
இரான் விக்ரமரத்ன
திலிப் வெதஆராச்சி
பாலித்த தெவரபெரும
பாலித்த ரங்க பண்டார
ரவி சமரவீர
புத்திக்க பத்திரன
மங்கள சமரவீர
சாகல ரத்ணாநாயக்க
கயந்த கருணாதிலக்க
வஜிர அபேவர்தன
பீ.ஹெரிசன்
சந்திரானி பண்டார
நிரோஷன் பெரேரா
நவீன் திஸாநாயக்க
ஜயவிக்ரம பெரேரா
எஸ்.பீ.நாவின்ன
அஷோக் அபேசிங்க
சம்பிக்க பிரேமதாஸ
தலதா அத்துகோரல
துனேஷ் கன்கந்த
அனோமா கமகே
மலிக் சமரவிக்ரம
ஜயம்பதி விக்ரமரத்ன
திலக் மாரபன
அத்துரலிய ரத்ன தேரர்
எம்.கே.டி.எஸ.குணவர்தன
துமிந்த திஸாநாயக்க
மொஹான் லால்
விதுர விக்ரமநாயக்க
சரத் அமுனுகம
கெஹேலிய ரம்புக்வெல்ல
சிறிபால கம்லத்
மஹிந்த அமரவீர
தேனுக்க விதானகமகே
சந்திரசிறி கஜதீர
சந்திம வீரக்கொடி
பிரியங்கர ஜயரத்ன
தயாசிறி ஜயசேகர
ரஞ்சித சியம்பலாப்பிட்டிய
டிலான் பெரேரா
விஜயமுனி சொய்சா
மஹிந்த சமரசிங்க
லக்ஷ்மன் யாப்பா
எஸ்.பீ.திஸாநாயக்க

திலங்க சுமதிபால