Sunday, August 23, 2015

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிப்ப

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்
தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிப்ப





இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தனதாக்கிக்கொண்டஇலங்கை தமிழ் அரசுக் கட்சி அந்த இரண்டு உறுப்பினர்களின் பெயர்களையும்  தற்போது வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம்
கே. துரைரட்ணசிங்கம் (திருகோணமலை),
சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா( வன்னி)

ஆகிய இருவருமே இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் ஓய்வுபெற்ற அதிபராவார். 
பெண் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலங்கை நிர்வாக சேவையசை் சேர்ந்தவர்உதவி திட்டமிடல் பணிப்பாளரான இவர். 1980களில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் புளொட் அமைப்பின் தொழற்சங்கப் பொறுப்பாளராக இருந்த வரதன் என்ற சிறீஸ்காந்தராஜாவின் மனைவியும் ஆவார்.

No comments:

Post a Comment