Friday, October 30, 2015

ருமேனியா இரவு விடுதியில் தீ விபத்து 27 பேர் பலி 155 பேர் படுகாயம்

ருமேனியா இரவு விடுதியில் தீ விபத்து
27 பேர் பலி 155 பேர் படுகாயம்

ருமேனியாவில் உள்ள இரவு விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாகினர் 155 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
அந்த இரவு விடுதியில் ராக் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்த்தப்பட்ட வானவேடிக்கையின் போது திடீர் என அந்த இரவு விடுதியில் தீவிபத்து ஏற்பட்டு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு துணை உள்துறை அமைச்சர் ரீட் அரபாத் கூறும் போது திடீர் என தீ பற்றிக் கொண்டதால் ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி அந்த இரவு விடுதிக்குள் மூச்சு திணறி இறந்துள்ளனர்.
 பெரும்பாலானோர் இளைஞர்கள். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் துணை பிரதமர் கேப்ரியல் கூறும் போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தீவிபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இரத்த தானம், அவசர சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment