Saturday, October 31, 2015

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் அவல நிலை பாரீர்!

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின்

அவல நிலை பாரீர்!

Mahjoon Mohammed Abubacker

இன்றைய சூழ்நிலைகளில் கல்முனை ஸாஹிராக்கல்லூரியை பார்க்கின்ற போதுதான் புரிகின்றது எந்த அளவுக்கு கல்லூரி நிர்வாகமும் பழைய மாணவர் சங்கமும் செயற்படுகின்றது என்று.
இந்த அவலநிலையை நோக்குகின்ற போது அண்மைக்காலமாக பெய்து வரும் அடைமழை காரணமாக கல்லூரியின் விளையாட்டு மைதானம் நீரினால் மூழ்கி காட்சியளிக்கின்றது. இதன் காரணமாக கல்லூரி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். .
எனவே மாணவர்களின் நலன்கருதி கல்லூரி நிர்வாகமும் பழையமாணவர் சங்கமும் விரைவாக செயற்படவேண்டும்.

இதனடிப்படையில் விளையாட்டுமைதானத்தை கல்லூரி நிதியில் இருந்தும் பழையமாணவர்கள் சங்க நிதியில் இருந்தும் கல், மண் மற்றும் கிரவல் போன்றவைகளை.இட்டாவது சரி செய்ய வேண்டும். இவற்றுக்கு முன்னதாக கல்லூரி வளாகத்தை சுற்றியுள்ள சகல தழ்ந்த  இடங்களையும் சரி செய்து அதற்க்குறிய வடிகான்களை அமைப்பீர்களானால் நிச்சயமாக கல்லூரியின் நடவடிக்கைகைகளை மேற்க்கொள்ளலாம்.

No comments:

Post a Comment