Thursday, December 24, 2015

கிறிஸ்துமஸ் தினமான இன்று நைஜீரியாவில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்தது 100 பேர் பலி

நைஜீரியாவில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்து
100 பேர் பலி


நைஜீரியாவில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து நடந்ததால் 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர் என அறிவிக்கப்படுகின்றது.
தென்கிழக்கு நைஜீரியாவில்  சமையல் எரிவாயு தொழிற்சாலை  அருகே இச்சம்பவம் நடடந்துள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நிரப்ப வந்தவர்கள் விபத்தில் சிக்கினர் எனக் கூறப்படுகின்றது.
.தீயணைப்பு நிர்வாகம், விபத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது எனினும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று அங்கு நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment