Saturday, December 5, 2015

மசூர் மௌலானாவை நல்லடக்கத்திலும் ஏமாற்றிய அரசியல் தலைமைகள்!

மசூர் மௌலானாவை நல்லடக்கத்திலும்
ஏமாற்றிய அரசியல் தலைமைகள்


முன்னாள் செனட்டர் மசூர் மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று 5 ஆம் திகதி சனிக்கிழமை அன்னாரது சொந்த ஊரான மருதமுனையில் நடைபெற்றது. இந்நல்லடக்கத்தில் அவர் சார்ந்த மற்றும் அவரது நேசத்திற்குரிய கட்சிகளின் பிரமுகர்களைக் காணவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கனவொன்று நிறைவேறாத ஒரு ஆத்மா - ஆம் அதுதான் அவர் பாராளுமன்றம் போகும் ஆசை , கடைசி வரை நிறைவேறவே இல்லை .அதை நிறை வேற்றுவோர் இருந்தும் நிறை வேற்றாதவர்கள் மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கத்திலாவது கலந்து கொள்ளாமல் விட்டது மௌலானாவின் குடும்பத்தினருக்கும் ஊரவர்களுக்கும் அன்னாரின் அபிமானிகளுக்கும்  ஒரு ஏமாற்றமாகப் போய்விட்டதாப் பேசப்படுகின்றது.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பிட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்..எம்.மன்சூர்-மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், றஹ்மத் மன்சூர்  மற்றும்  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை ஆகியோருடன் சில உள்ளூர் கட்சிப் பிரமுகர்கள் மட்டுமே ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்
அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள் பலர் மௌலானா சார்ந்த கட்சியைச் சார்ந்திருந்தும் அவர்களைக் காணாமல் மௌலானாவின் குடும்பத்தினரும் ஊரவர்களும் ஏமாந்து போயினர்
தமது கட்சியைச் சேர்ந்த தலைவரோ செயலாளரோ தவிசாளரோ கலந்து கொள்ளாத இவ்விடயம் மக்கள் மத்தியிலும் போராளிகள் மத்தியிலும் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது



No comments:

Post a Comment