Tuesday, December 29, 2015

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் வில்பத்து விவாதம் குறித்து......... முகநூல் நண்பர்களின் சில கருத்துக்கள்

அமைச்சர் றிஷாத் பதியுதீனின்
வில்பத்து விவாதம் குறித்து.........

முகநூல் நண்பர்களின் சில கருத்துக்கள்




சாணக்கியம் பேசும் தலைமைகள் பேரன் பேத்திகளுடன் உல்லாசம் போயிருக்கும் இவ்வேளையில் றிஷாத் பதியுதீனின் இந்த முயற்சி நிச்சயமாக பாராட்டத்தக்கதுதான். வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படாத நேற்றைய  வில்பத்து விவாத்தில் மார்பு தட்டி இறங்கவும் ஒரு தைரியம் வேண்டும். மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் காணப்பட்ட ந்த ஆளுமை இன்று காணக்கிடைப்பது மிக அபூர்வம். றிஷாத் பதியுதீன் , முஜிபுர்ரஹ்மான் போன்ற ஓரிரு அரசியல்வாதிகளால் என்னமோ இலங்கை முஸ்லிம்கள் இன்னும் ஓரளவு சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகிறது...

Ziyam Jahees Buhary

Safras Lathef தலைமைகள் பேரம் பேத்திகளுடன் உல்லாசம் அநுபவிக்க விக்க கூடாதா நண்பா?? மக்களுக்கு சேவை செய்வதானால் தனிப்பட்ட வாழ்க்கையை தீயாகம் செய்ய வேண்டுமா?? அரசியல் வேறு அந்த பிஞ்சு குழந்தை வேறு.....நண்பா

Ziyam Jahees Buhary இவ்வளவு நாளும் அதைதானே செய்தோம். மக்களை தியாகம் செய்த சுய இலாப அரசியல். இனியாவது கொஞ்சம் அரசியல் செய்யலாமேண்டுதான் சொன்னேன். உறைத்திருந்தால் என் கருத்து சரியான இடத்தைதான் போய் சேர்ந்திருக்கிறது.

Safras Lathef அரசியல் செய்வதானால் தனிப்பட்ட வாழ்க்கையை தீயாகம் செய்ய வேண்டுமா?? "பேரம் பேத்தி " என்னும் உங்கள் கருத்து வருத்தம் அழிப்பதாக உள்ளது .. இதை நான் சொல்வது குழந்தை ரசனை உணர்வுடன் மட்டுமே ...


Ziyam Jahees Buhary அரசியல்வாதிகள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஈடுபடக்கூடாது என்று நான் இங்கு கூறவில்லை. வில்பத்து விடயம் மற்றும் இது போன்ற இடம் பெயர் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு அச்சுறுத்தல் விடப்படும் இத்தருணத்தில் தேசிய தலைமை என்று கூறிக்கொண்டு மௌனம் காப்பதும் முறையற்ற நேரத்தில் பொருட்படுத்தாது இது போன்ற பிரசுரங்களை பகிர்வதும் மிக மிக வேதணை தருகின்றது நண்பரே!  இதுபோன்ற தருணங்களில் தலைமை வெளிநாட்டு குதுகளிப்பில் இருப்பதும் வழமை என்பது எமது னுபவங்கள் ஊடாக காணக்கூடியதாய் இருந்தது.

Ashik Ahamed இனவாதிகளும், அரசியல் எதிரிகளும் வாயடைத்துப் போகும் வண்ணம் வாதிட்டீர்.நான்குபேருக்கு நடுவில் தனியாளாய் நின்று சளைக்காமல் போராடினீர். "வாழ்த்துக்கள் ".

"எமது நாட்டில் கிரிக்கட் போட்டியின் போதுதான் நடுவர்களும் சேர்ந்து விளையாடுவது வழக்கம் இப்போது விவாதங்களிலும் தொடங்கிவிட்டார்கள்

"Kalmunai Thasan"யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 2679)


Sulaima Lebbe Hameed  இந்த விவாதத்தை நோக்கினால் முற்றிலும் தேரரருக்கு சார்பாகவே இருந்தது. நடுநிலையாக கேள்விகள் தொடுக்கப்படவில்லை.என்றாலும் ரிஷாத் முடிந்தவரை இடைமறித்து கேள்வி கேட்பதற்கு விடாமல் தனது முழு திறமையும் பயன்படுத்தி மூச்சி விடாமல் பேசி தேரரின் கேள்விகளை ஆதரங்களோடு தகர்த்தெறிந்தார்.ஊடகவியலாளரும் அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் இடித்துகொண்டிருந்தார்.முள்ளிக்குளம் தவிர்ந்த வேறு எந்த ஊருமே வரை படத்தில் இல்லையென்று கூறுமளவுக்கு இனத்துவேசத்தை கக்கியதையே காணக்கூடியதாக இருந்தது. புத்தளத்தில் ஆங்காங்கே உள்ள மக்களுக்கு ஹிறு டீவி பணம் கொடுத்து பெற்ற வர்ணனையே ஒளி பரப்பியது.புத்தளத்திலும் காணி உண்டு மன்னாரிலும் காணி உண்டு. றிஷாத் தந்தார் என்றெல்லாம் பணம் கொடுத்துபெற்ற வர்ணனையே ஒளிபரப்பியது. மரத்திலிருது விழுந்தவனை மாடு மிதித்தது மாத்திரமன்றி பாம்பும் சீண்டினால் என்னவாகும். ஊடக தர்மத்தை மீறும் இனத்துவேஷ ஹீறு டீவியை ஒரு இஸ்லாமிய நாட்டில் இருந்தால் என்னனவாகும்.
இதற்கும் கூட ஊடகவியலாலரின் பெயரைக்கூறியே நீங்கள் யோசித்துப் பாருங்கள். உங்களுக்கும் இதே கதி நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் பிறந்த மண்ணைவிட்டுக்கொடுக்க மாடீர்கல்தனே. தலைவர் ரிஷாதின் ஜானக்கியமான பதில் ராடர்கள் வந்து காதில் விலும்போதேல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக பேச எடுத்த விடயத்தை விட்டு ஊடகவியலாளர் நலுவியதையே அவதானித்தோம்.
மொத்தத்தில் இவர்கள் வில்பத்து அளிகிறது என்றார்கள்
விடை கிடைத்தது அது வில்பத்து அல்லவென்று.
கல்லாறு போறேஸ்ட் என்றார்கள் விடை கிடைத்தது இங்கே வரலாற்று தொன்மை வாய்ந்த ஊர்கள் இருந்தது என்று நிரூபிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் இங்கே வசிப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்த்லாக பார்க்கிறார்கள்.இவர்கள் முஸ்லிம்களின் மீள்குடிஏற்றத்தினை திட்டமிட்டே அரங்கேற்றும் இனத்துவேஷ நாடகமே அன்றி சூழல் மீது பாசம் கொண்டவர்கள் அல்ல என்பதனைகூட ஆதரங்களோடு நிரூபிக்க தவறவில்லை.

வாழ்த்துக்கள் தலைவர் றிஷாத் அவர்களே உங்களின் ஆயுட்காலதினை நீடித்து இன்னும் பல்லாண்டு காலம் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகுரலாக மிளிர அல்லாஹ்வே போதுமானவன்
Sajith Ahamed முஸ்லிம் அல்லாத மீடியாக்களிடம் உங்களுக்கு அநீதி அல்லாமல் வேறு எதையும் எதிர்பார்த்தால், நீங்கள்தான் உலகின் மிகப்பெரிய முட்டாள்.

மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ,தலைவர், முஸ்லிம் உலமா கட்சி
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் ஆனந்த சாகர தேரோவுக்குமிடையில் நடந்த விவாதத்தில் குர்ஆன் மீது சத்தியம் செய்யும்படி சொன்னது சம்பந்தமாக பலரும் எம்மைக்கேட்கிறார்கள்.
முதலில் இந்த விவாதம் ஏன் எற்பாடு செய்யப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேரர் முன் வைத்த குற்றச்சாட்டுக்களை அவர் நிரூபிக்க வேண்டும் என்பதே விவாதத்தின் அடிப்படையாகும். சுமார் மூன்று மணி நேரம் விவாதம் நடந்தும் தேரரால் தமது குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை முன் வைக்க முடியவில்லை. இறுதியில் இத்துடன் இந்த விவாதம் முற்றுப்பெறுகின்றது என அறிவிப்பாளர் கூறி மின்சார குமிழ்கள் அணைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குர்ஆனில் சத்தியம் செய்ய முடியுமா என தேரர் திடீர் என வினவியது அனாவசியமான ஒன்றாகும். காரணம் முஸ்லிம்கள் ஒரு போதும் குர்ஆனில் சத்தியம் செய்ய மாட்டார்கள். இறைவன் ஒருவன் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனையாகும்.
அதே வேளை இவ்வாறு சத்தியம் செய்து நிரூபிக்க வேண்டும் என்றிருந்தால் சுமார் மூன்று மணி நேரம் நேயர்களின் நேரத்தை வீணடித்திருக்க தேவையில்லை. அதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே போதுமானதாகும். அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என தேரர் தமது தம்ம பதத்தின் மீது சத்தியம் செய்ய அதனை அமைச்சர் மறுத்து இறைவன் மீது சத்தியம் செய்வதுடன் விடயம் ஐந்து நிமிடத்துள் முற்றுப்பெற்றிருக்கும். ஆக இந்த விவாதம் என்பது ஆதாரங்கள் முன் வைக்கப்பட வேண்டும் என்பதுதானே தவிர சத்தியம் செய்தல் தலைப்பு அல்ல. அப்படித்தான் அல்குர்ஆன் மீது சத்தியம் செய்வது என்றிருந்தாலும் கூட அல்குர்ஆனை முழுமையாக ஏற்றுக்கொள்பவர்தான் அந்த சத்தியத்தையும் ஏற்பார்.
அதே போல் பௌத்த தம்ம பதத்தின் மீது தேரர் சத்தியம் செய்ய வேண்டும் என அமைச்சராலும் கூற முடியாது. காரணம் அள்ளாஹ் அல்லாதவற்றில் சத்தியம் செய்யும்படி ஒரு முஸ்லிம் மற்றவரை கூற முடியாது. அந்த வகையில் அல்குர்ஆன் மீது சத்தியம் செய்து அதனை ஒரு விளையாட்டாக கருதுவதற்கு இடமளிக்க முடியாது என்ற வகையில் அதிலிருந்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் தவிர்ந்து கொண்டமையை முஸ்லிம் சமயத்தலைவர்களின் கட்சி என்ற வகையில் உலமா கட்சி பாராட்டுகிறது. இது பற்றிய இஸ்லாமிய சட்டத்தை அவர் நன்கு தெரிந்து வைத்துள்ளார் என்பது மகிழ்சியை தருகிறது.

Mohideen Bawa

விவாதத்தின் போது கடைசியில் தேரர் கூறினார் "அதிர்ஷ்ட்ட வசமாக நாங்கள் யுத்தத்தை வென்றோம் "என்று. இதன் போது , ஊட கவியலாளர் ஏன் அப்படி அதிர் ஷ்ட்ட வசமாக என வினவ தேரர் அதற்கு விடை சொல்வதைத் தவிர்த்தார் .mஅப்படி தேரர் கூறியதன் உள் நோக்கம் என்ன ?

Farzadh Mohamed
ஹிறு tvவில் ஒலிபரப்பான சல குன விவாதத்தின். நன்மைகள் இவைதான்
1 முஸ்லிம்களை இனவாதிகள் எதிர்கும் போது வாய் பொத்தி இருக்காமல் மக்களுக்காக போராடுவோம் என்று நிறுபித்து இருக்கிறார்.
2 வில்பத்து காட்டை அழிக்கவில்லை என்ற உண்மையினை சிங்கள மக்கள் புரிந்த்து கொள்ளும் அளவிற்கு ஆதாரத்தை காட்டயுள்ளார்.
3 மரிச்சிக்கட்டி வில்பத்து போன்ற இடங்கள் முஸ்லிம்கள் வாழ்ந்த புர்வீகம இடங்கள் என்ற உண்மை
4 ரிஷாட் குடு வியாபாரம் செய்கிறார் என்று குறிப்பிட்ட ஆனந்த தேரர் எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. இதில் உண்மை இல்லை என்ற தெளிவு
5 யாரும் முறையற்ற வகையில் குடியமர்த்த படவில்லை என்ற உண்மையை வௌிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

மாறாக சிலர் நினைப்பது போன்ற கீழ்த்தர நோக்கங்கள் இல்லை .

Rishad Bathiudeen
அல்ஹம்துலில்லாஹ் சிறந்த ஒரு போட்டி இதில் நான் கலந்துகொள்ள என்னை ஊக்கமளித்த எனது ஊழியர்கள், நண்பர்கள், சட்ட வல்லுனர்கள், எனது ஆதரவாளர்கள் எனக்காக துஆ செய்த , நோன்பு நோற்ற அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றி.

ஜஸாகல்லாஹ் ஹய்ரன்.

.

No comments:

Post a Comment