Monday, December 28, 2015

பழமைவாய்ந்த பள்ளிவாசல் இனம் தெரியாதோரால் நாசமாக்கப்பட்டுள்ளது அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேரில் சென்று பார்வை

பழமைவாய்ந்த பள்ளிவாசல்

இனம் தெரியாதோரால் நாசமாக்கப்பட்டுள்ளது

அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேரில் சென்று பார்வை

அம்பாறை மாவட்டத்திலுள்ள குடியேற்றக் கிராமமான 06ம்  கிராமத்தில் அமைந்துள்ள 1971ம் ஆண்டு பழமைவாய்ந்த மஸ்ஜித் ரவ்ழா பள்ளிவாசல் புனர்நிர்மானம் செய்துகொண்டிருக்கும் நிலையில் இனம் தெரியாதோரால் நேற்று இரவு நாசமாக்கப்பட்டுள்ளதுடன்  அதனைச் சுற்றியுள்ள  வேலிகளும் விஷமிகளால் உடைத்து றியப்பட்டுள்ளது.

இது விடயமாகத் தகவல் அறிந்ததும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களும் ,மாகாண சபை உறுப்பினர் M.I.மாஹிர் அவர்களும் ,உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து  சென்று பார்வையிட்டதாகவும் தகுந்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும்  அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment