Friday, January 1, 2016

ஊடகவியலாளர்களுடனான புதுவருட ஒன்றுகூடல் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு நிகழ்வு! ஓர் நினைவு!!

ஊடகவியலாளர்களுடனான புதுவருட ஒன்றுகூடல்
2014ஆம் ஆண்டு  இடம்பெற்ற ஒரு நிகழ்வு! ஓர் நினைவு!!

திதுலன (ஒளிரும்) கல்முனை திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர்களுடனான புதுவருட ஒன்று கூடல் ஒன்று மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் கேட்போர் கூடத்தில் 2014.01.01 ஆம் திகதி மாலை 7.30 மணியாளவில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக்குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்த ஒன்றுகூடலில் அதிக எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தங்களின் கடந்தகால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் நல்ல பல ஆலோசனைகளையும் வழங்கினர்.
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸும் கடந்த காலத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவங்களை எடுத்துக் கூறியதுடன் தானும் எதிர்காலத்தில் ஒரு ஊடகவியலாளனாகச் செயல்படப் போவதாகவும் தெரிவித்தார்.

ஒன்று கூடலில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் 2014 ஆம் ஆண்டிற்கான திதுலன டயறி வழங்கி சந்தோசப்படுத்தினார். இந்த ஒன்றுகூடலில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் .ஆர். பறக்கத்துல்லாஹ்வும் கலந்து கொண்டார். இங்கு மருதமுனை கமால்  இஸ்லாமிய பாடல்ளைப் பாடி ஊடகவியலாளர்களை மகிழ்வித்தார்.






No comments:

Post a Comment