Tuesday, January 5, 2016

தோணாவில் 3 கோடி ரூபா செலவில் செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் எங்கே? சாய்ந்தமருது பிரதேச மக்கள் ஏமாற்றப்பட்டனரா?

தோணாவில் 3 கோடி ரூபா செலவில் செய்யப்பட்ட
வேலைத்திட்டங்கள் எங்கே?
சாய்ந்தமருது பிரதேச மக்கள் ஏமாற்றப்பட்டனரா?

சாய்ந்தமருது தோணாவில் 30 மில்லியன் ரூபா (3 கோடி ரூபா) செலவில் செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் எங்கே? தோணாவில் புல்,பூண்டுகளை அகற்றுவதற்கும் கிறவல் போடப்பட்ட ஒரு பாதை அமைப்பதற்கும் மாத்திரம் இத் தொகைப் பணம் செலவிடப்பட்டிருக்கிறதா? என சாய்ந்தமருது பிரதேச மக்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகின்றனர்.

சாய்ந்தமருது தோணா 30 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படவிருப்பதாகக் கூறி கடந்த மே மாதம் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதற்கட்ட அபிவிருத்தி வேலைகளை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இவ்வேலைத் திட்டத்தை இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் நடைமுறைப்படுத்தவிருப்பதாகவும் இத்திட்டம் இரண்டு மாதங்களுக்குள் முடிவுறும் எனவும் மக்களுக்கு அவ்விடத்தில்  காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தோணா அபிவிருத்தியின் முதற் கட்டமாக தோணாவை அகழ்வு செய்து மற்றும் துப்பரவாக்குவது என்றும் .அதன் பின்னர் பாதுகாப்புச் சுவர்கள் தோணாவின் இருமருங்கிலும் கட்டப்படும். அத்துடன் கடல் நீரை தோணாவுக்குள் செலுத்துவதற்கும் தோணாவிலிருந்து நீரை கடலுக்குள் செலுத்துவதற்குமாக மூடித் திறக்கக் கூடிய பெரிய அளவிலான குழாய்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்து எனத் தெரிவிக்கப்ப்ட்டிருந்தது.
இதன் பின்னர் முகத்துவாரத்திற்கும் வைத்தியசாலை வீதிக்கும் இடைப்பட்ட தோணாவின் பகுதி படகுகள் தரிப்பு நிலையமாகவும் பாரிய வர்த்தக வலயமாகவும் பொழுது போக்கிடமாகவும் மாற்றப்படும் என்றும்
வைத்தியசாலை வீதியிலிருந்து மாளிகைக்காடுவரை தோணாவின் இருமருங்கிலும் நடைபாதைகள அமைக்கப்பட்டு  பூ மரங்கள், ஆசனங்கள்,குடிநீர் வசதிகள், குப்பை போடும் வசதிகள் என்பனவற்றோடு ஒரு நீண்ட பூங்கா அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
2015.05.01ம் திகதி SLLRDC பணிப்பாளர் மௌலவி SLM ஹனிபா அவர்களின் அழைப்பின் பேரில் குழு உறுப்பினர்கள் சாய்ந்தமருது பி.செயலகத்தில் கௌரவ அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களைச் சந்தித்தனர். .இச்சந்திப்பின் போது SLLRDC தலைவர், பிரதேச செயலாளர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் கௌரவ பிர்தௌஸ் ஆகியோரும் சில ஊர்ப்பிரமுகர்களும் பிரசன்னமாகியிருந்தனர்;.இச்சந்திப்பின்போது கௌரவ அமைச்சர் அவர்கள் சாய்ந்தமருது தோணா அபிவிரத்தி திட்டத்திற்கு திறைசேரி 30 மில்லியன் ருபா ஒதுக்கியுள்ளதாகவும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு 11.05.2015 இல் நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும் பொறியியலாளர் ஒருவரின் தலைமையில் இங்கு காரியாலயம் ஒன்று அமையவிருப்பதாகவும் தேவையான இயந்திரங்கள் இங்கு நிறுத்திவைக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு SLLRDC தலைவருக்கும் பணிப்பாளருக்கும் பணிப்புரை வழங்கினார்.அச்சமயம் குழு உறுப்பினர்கள் சில விடயங்களைச் சுட்டிக்காட்டினர். பாதுகாப்புச்சுவர்கள் கட்டும்போது ஆழமாகவும் உறுதியாகவும் அத்திவாரம் இடல், தோணாவின் உயர்ந்த பகுதிகளிலிருந்து சல்வீனியா மற்றும் கழிவுப் பொருட்கள் நடுப்பகுதிக்கு வராது தடுப்பதற்கான ஏற்பாடுகள், சில வீடுகளிலிருந்து தோணாவுக்குள் கழிவு நீர் செல்வதைத் தடுக்க மாற்றொழுங்குகள், 03 பாலங்கள் நிர்மாணித்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பாலங்கள் அமைப்பது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.


 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தபோது.

தோணாவில் புல்,பூண்டுகள்  அகற்றப்பட்டு  கிறவல் போடப்பட்ட  பாதை


 தோணா பிரதேசத்தில் அபாயகரமான நிலையில் உள்ள ஒடுக்கமான பாலம்

தோணா பிரதேசத்தில் அபாயகரமான நிலையில் உள்ள ஒடுக்கமான பாலம்


No comments:

Post a Comment