Friday, February 26, 2016

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளுநர் மாளிகைக்கு அருகில் தற்கொலை படை தாக்குதல்: 11 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளுநர் மாளிகைக்கு அருகில்
தற்கொலை படை தாக்குதல்: 11 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளுநர் மாளிகைக்கு அருகில் சற்று முன்னர் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டு இராணுவக் கமாண்டர் (Afghan militia commander) உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 40 பேர் படுகாயம் அடைஹ்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள ஆசதாபாத் என்ற நகரில் ஆளுநரின் மாளிகை அமைந்துள்ளது.
இந்த மாளிகைக்கு அருகில் சற்று முன்னர் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தற்கொலை படை தாக்குதலாக கருதப்படும் இந்த சம்பவத்தில் 11பேர் வரை பலியாகியுள்ளதாகவும், 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலில் அப்பாவி மக்கள் பலத்த காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

No comments:

Post a Comment