Thursday, February 25, 2016

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால்

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினை நோக்கிச் செல்லவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. .
இதேவேளை, பௌத்த துறவிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான வெற்றிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு போதுமான வசதிகளை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் தொகையை அதிகரிக்க வேண்டும்.
கல்வி அமைச்சாலும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவாலும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ள சலுகைகள் மீண்டும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
கல்வித்துறையில் உள்ள சகல பிரச்சினைகளும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் தமது கோரிக்கைகளில் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment