Thursday, March 31, 2016

லண்டன் சாலைகளை ஜொலிக்க வைக்கும் சவூதி கோடீஸ்வரரின் தங்கமுலாம் பூசப்பட்ட ஆடம்பர கார்கள்

லண்டன் சாலைகளை ஜொலிக்க வைக்கும்

சவூதி கோடீஸ்வரரின் தங்கமுலாம் பூசப்பட்ட ஆடம்பர கார்கள்




சவூதி அரேபியாவின் இளவரசர் துர்கி பின் அப்துல்லா( வயது44). மிகப்பெரும் கோடீஸ்வரரான இவர், இரும்புக்கு பதிலாக தங்கத் தகடுகளால் தயாரிக்கப்பட்ட சூப்பர் கார்களில் லண்டன் நகர வீதிகளில் வலம் வருகிறார்.
தனது ஆடம்பரக் கார்களான பென்ட்லி, மெர்சிடஸ், லம்பாகினி, ரோல்ஸ் ராய்ஸ் ரக கார்களில் தங்கத் தகடுகளை பொருத்தி வலம்வரும் இளவரசர் துர்கி பின் அப்துல்லா பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார்.
இளவரசர் துர்கி பின் அப்துல்லாவின் சமூக வலைத்தள புகைப்படங்களும், வீடியோக்களும் அவரது ஆடம்பர வாழ்க்கையை பறைசாற்றுகின்றன. ஒரு புகைப்படத்தில் பாலைவன ஓட்டகம் ஒன்றை அவர் தனது விலைமதிப்பு மிக்க மெர்சிடஸ் ஜி63 ல் துரத்துகிறார். மற்றொரு புகைப்படத்தில் மெர்சிடஸ் ஜீப்பின் டிரைவர் இருக்ககையில் சிறுத்தை ஒன்று நிற்கிறது.

தெற்கு லண்டனில் உள்ள அவரது வீட்டில் மட்டும் பலகோடி பவுண்டுகள் மதிப்பிலான தங்க கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. அந்த கார்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள லண்டன் நகர இளைஞர்களும், இளம்பெண்களும் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்களாம்.

குழந்தை சரிவரப் பேசாமலிருக்கிறதா?

குழந்தை சரிவரப் பேசாமலிருக்கிறதா?


பிறந்தது முதல் பலவிதமான ஒலிகளைக் கேட்டு வளரும் குழந்தை, எளிதில் நன்கு பேச ஆரம்பிக்கிறது. இப்படி பலவிதமான ஒலிகளுக்கும் குழந்தை என்ன செய்கிறது என்பதும் நமக்குத் தெரியும். கூப்பிட்டக் குரலுக்கு குழந்தை திரும்பிப் பார்க்கவில்லையானால் காது கேட்கும் திறன் குறைவு அல்லது மூளை வளர்ச்சி குறைவு என்று எடுத்துக் கொண்டு அதற்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
குழந்தை சரிவரப் பேசாமலிருப்பது அல்லது தாமதமாகப் பேச ஆரம்பிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
1. காது கேளாமைஒன்று அல்லது இரண்டு காதுகளும்
2. மூளை வளர்ச்சிக் குறை (Mental Retardation)
3. அன்னப் பிளவு (Cleft lip / Palate)
4. நாக்கு அடியில் ஒட்டி இருத்தல் (Tongue Tie)
5. குரல்வளைப் பிரச்னைகள்
6. ஆட்டிசம் (Autism)
போன்றவை ஒரு சில உதாரணங்கள் ஆகும். மருத்துவ பரிசோதனைகள் தேவை. முக்கியமாக இரண்டு உண்மை நிகழ்வுகளைக் கூறலாம்.
குழந்தைக்கு காது சரியாகக் கேட்கிறதா என்று பெற்றோர்களிடம் கேட்டால் டிவியில் பாட்டுப் போட்டால் நன்றாக டான்ஸ் ஆடுவான் என்று பதில் சொல்வார்கள்.
டிவியின் வண்ணக் காட்சிகளைக் கண்ணால் பார்க்கிறது குழந்தை. உணர்வுகள் தூண்டப்பட்டு டான்ஸ் ஆடுகிறது. பாட்டு காதில் கேட்டுத்தான் டான்ஸ் ஆடுகிறது என்று எடுத்துக் கொள்ள முடியாது. இந்த அடிப்படைக் கருத்தைப் புரிந்து கொள்ளாத பல பெற்றோர்கள் குழந்தையை தாமதமாக மருத்துவரிடம் அழைத்து வருகிறார்கள். காது சரிவரக் கேட்கவில்லை என்பது அவர்களுக்குப் புரிகிறது. இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

குழந்தையைக் கண்ணோடு கண் பார்த்து பேசி, சிரித்து, குழந்தையின் முக பாவங்களை சரிவர கவனித்தால், குழந்தைக்கு ஏதும் குறைபாடு இருந்தால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

குழ‌ந்தைக்கு பல் துலக்க சொல்லிக் கொடுப்பது தாய்மார்களின் கடமையாகும்.

குழந்தைக்கு பல் துலக்க சொல்லிக் கொடுப்பது

தாய்மார்களின் கடமையாகும்.



குழந்தைகளின் ற்களை சுத்தமாக வைத்திருப்பது தா‌‌ய்மார்களின் கடமையாகும். ற்கள் முளைக்க ஆரம்பித்தபின்னர் தாய் தனதுவிரல்களால் ன்கு தேய்த்த வாயை சுத்தப்படுத்த வேண்டும்.
ஓராண்டுகள் ஆகும்நிலையில் குழந்தைகளுக்கானபிரஷ் கொண்டு ற்களை லேசாக தேய்த்துவிடலாம். வ்வப்போது அவர்களாகவே ல் துலக்க பழக்கப்படுத்த வேண்டும். பே‌‌ஸ்டை சாப்பிடாமல்ல் துலக்க பயன்படுத்த வேண்டும் ன்று சொல்லிக் கொடுத்து அவர்களை ல் துலக்க வைக்க வேண்டும்.

சிறுவயதிலேயே பல் விலக்க சொல்லிக்கொடுத்தால் தான் வளரும் போது அவர்களுக்கு தானாக பற்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

குழந்தையை குளிப்பாட்டும் முறை

குழந்தையை குளிப்பாட்டும்  முறை



1. குளிக்கவைப்பவர், தரையில் இரண்டு கால்களையும் நன்கு நீட்டி உட்கார வேண்டும்.
2. கணுக்கால் அருகில் கால்களின் இடைவெளியில் குழந்தையின் முகம் இருக்குமாறு குப்புறப் படுக்கவைக்க வேண்டும்.
3. குழந்தையின் தலையின் பின்பகுதி, கழுத்து, முதுகு, புட்டம் ஆகியவற்றில் நீர் ஊற்றி, சோப் போட்டு சுத்தம் செய்து குளிக்கவைக்கவும்.
4. குழந்தையை திருப்பி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியை சுத்தம் செய்யவும்.
5. காதுக்குள் நீர் புகாமல், காதுகளின் பின்புறம், கழுத்து மடிப்பு, அக்குள், கைகளை சுத்தம் செய்யவும்.
6. இறுதியாக, குழந்தையின் இடுப்பு, பிறப்பு உறுப்பு பகுதி மற்றும் கால்களை சுத்தம் செய்யவும்.
7. பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்யும்போது, முக்கியமாக பெண் குழந்தைக்கு முன்புறத்திலிருந்து பின்புறமாகச் செல்ல வேண்டும்.
8. குழந்தையை மிருதுவான காட்டன் துண்டினால் துடைத்து உடனே உடைகளை அணிவிக்கலாம்.
ரொம்ப முக்கியமாக, வேகமாக அழுத்தித் துடைப்பதை அல்லது தேய்ப்பதைத் தவிர்க்கவும். காரத்தன்மை கொண்ட சோப் வகைகளை தவிர்க்கவும்.




குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா?

குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா?



குழந்தையைக் குளிக்கவைப்பதற்கு முன், சுத்தமான தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றைத் தடவிக் குளிப்பாட்டும் முன், மசாஜ் செய்வது நமது பாரம்பரியப் பழக்கம்தான்!
எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் குழந்தைக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன.
குழந்தையின் தோல் சீராகப் பராமரிக்கப்படுகிறது.
குழந்தையின் உடல் வெதுவெதுப்பாக இருக்க உதவுகிறது.
குழந்தைக்கு உணவாகவும் ஒருவிதத்தில் பயன் தருகிறது.
குழந்தையின் எடை அதிகரிக்கிறது.
மன அழுத்தம் குறைவதால், குழந்தை அமைதி பெறுகிறது.

யார் எண்ணெய் மசாஜ் செய்யலாம்?

தாயின் தொடு உணர்வை குழந்தை மிகவும் விரும்புகிறது; எதிர்ப்பார்க்கிறது. அதனால், தாய் எண்ணெய் மசாஜ் செய்வது அதிகப் பலன் தரும்.
அப்பா, தாத்தா, பாட்டி, மற்ற உறவினர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் எண்ணெய் மசாஜ் தரலாம்.

எண்ணெய் மசாஜ் தரும் முறை

குழந்தை அமைதியாக, ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பால் அல்லது உணவு கொடுத்து 2 மணி நேரத்துக்குப் பிறகு மசாஜ் தரலாம்.
தினமும் 2 அல்லது 3 முறை அல்லது ஒரு முறையாவது மசாஜ் செய்வது நல்லது.
சுமார் 30 நிமிடங்களாவது தொடர்ந்து மசாஜ் செய்தால் நல்ல பலன் தெரியும்.

விருட்சம் கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் சமூகப் பணிகளுக்கான ஓர் பதிவு


விருட்சம்

கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் அவர்களின்

சமூகப் பணிகளுக்கான ஓர் பதிவு



2013.10.19ம் நாள் மருதமுனை நகரில், “மருதமுனை மக்கள் மன்சூர்அவர்களுக்குச் சொரியும் நன்றிப் பூக்கள்என்ற கருப்பொருளில், முன்னாள்அமைச்சர் கலாநிதி .ஆர்.மன்சூர் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் வைபவம்நடைபெற்று, அதன் அங்கமாகவிருட்சம்என்ற விழாமலர் ஒன்றும்வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
வைபவத்தின்போதுவிருட்சம்பிரதிகள் ஒரு சிலவே பகிர்வுசெய்யப்பட்டிருந்தன. ஏதோ காரணங்களினால் தடைப்பட்டிருந்த விநியோகம் நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் இடம்பெறுவதைக் காணக்கூடியதாய் உள்ளது.
இவ்வாறான வைபவங்களின்போது மலர் வெளியீடுகள் இடம்பெறுவதும், அதனைப் பெற்றுப் புரட்டிப் பார்ப்பதும், படித்தறிவதும், ஆவணப்படுத்துவதும் வழமையாகிவிட்டது. விருட்சம் ஆவணப்படுத்தத் தகுந்தது எனலாம்.
அதன் முகவடிவு, விருட்ச நாயகன் கலாநிதி .ஆர்.மன்சூர் அவர்களின் விருட்ச வசீகரத் தோற்றத்தினையும், மருதமுனையின் இரு பெரும் மகாவித்தியாலயங்களினது அழகுறு வடிவங்களையும் காட்டி 175 பக்கங்களுடன் 10" X 7" என்ற அளவில் கனதியானதொரு கவர்ச்சி வடிவாய் அமைந்துள்ளது.
அதனுள் மன்சூர் அவர்களின் நினைவுக் குறிப்புகள், அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் முப்பதுக்கும் மேற்பட்ட நிழல் படங்கள், அன்னார்பற்றி 94 ஆளுமைகளின் ஆக்கங்கள், நான்கு வர்த்தக நிறுவனங்களின் ஆசிச் செய்திகள் அடங்கலாக இன்னும் பல காத்திரமான அம்சங்கள்பொதிந்துள்ளன.
விருட்சம் ஒரு விழாமலர் என்ற இடத்தில் நின்று நூலொன்றுக்கானதன்மை அற்றிருந்தாலும், நூலுக்குப் போல் ஒரு நோக்கு அவசியப்படுகிறது. சாதாரண அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கான வெளியீடு என்ற வகையில் அமைந்திருந்தாலும், அவரிடத்தில் அற்புத மனிதம் ஒன்றினை இனம் கண்டு அதனைச் சுவைத்த நெஞ்சங்களின் உணர்ச்சி வெளிப்பாடுகள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதால் விருட்சம் பற்றியதொரு பார்வை அவசியப்படுகிறது
மருதமுனை மக்களின் கலாநிதி மன்சூர் அவர்களுக்கான நன்றிப் பூக்கள்சொரியும் விழாஏன் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்ற விபரங்களை ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில்; தலைவர், செயலாளர், மலர்வெளியீட்டாளர் என்போர் மன்சூர் அவர்கள்; மருதமுனை மக்களின் தேவையறிந்து குறைகள் போக்க எவ்வாறெல்லாம் செயற்பட்டார் என்பதை அருகிலிருந்து அனுபவித்துணர்ந்த உண்மைகளை உலகறியச் செய்யும்முயற்சியாக விருட்சம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
விருட்ச நாயகன் கலாநிதி .ஆர்.மன்சூர் அவர்கள் பொது வாழ்க்கையில் விருட்ச தன்னை ஒரு அரசியல்வாதியாக இணைத்துக் கொண்டு பொதுசன விருப்பு வெறுப்புகளுக்குள் உள்வாங்கப்படுவதால் விருட்சம் படிக்கப்படும் போது, .ஆர்.மன்சூர் அவர்களது செயற்பாட்டுமுறை, சேவைகளின் தன்மை, அவரது சுபாவம், அவரிடத்தில் காணப்படும் மனித நேயம், பண்பாட்டு முறை,எழிமை, நேர்மை போன்ற குணாம்சங்கள் அறியப்பட்டு அன்னாரது பெருமையை மேலும் உணரவும், அவரைப் புரியத் தவறியோர் புரிந்துகொள்ளவும் விருட்சம் துணைநிற்கின்றது.
விருட்சம் சுமந்துள்ள விருட்சம் கருத்துக்கள், எவரது ஆணைக்கும் ஏவலுக்கும் கட்டுப்பட்டோ, எந்த நன்மைகளையும் எதிர்பார்த்தோ வெளிக்காட்டிய கற்பனை வடிவங்களல்லாது அன்னாரை நெருங்கி அனுபவித்து சுவைத்து உதிர்த்த உணர்வு வடிவங்களாகக் காணப்படுவதை இம்மலரின்சிறப்பம்சமாகக் கொள்ளலாம்.
விருட்சம் சுமந்துள்ள ஆக்கங்களைத் தந்துள்ளவர்கள் பல்வேறுதுறைகளிலும் ஒளிவீசி நிற்கும் ஆளுமைகள் அவர்களுள்; ஆசிரியர்கள், அதிபர்கள், மார்க்க அறிஞர்கள், பள்ளிவாயில் நம்பிக்கை யாளர்கள், அரசியல் அவதானிகள், முன்னாள் இன்னாள் அரசியல் தலைமைகள், இளைய, முதிய ஊடகவியலாளர்கள், கல்வியியற் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக நூலகவியலாளர்கள், பதிவாளர்கள், பீடாதிபதிகள், உபவேந்தர்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் இன்னும் வைத்தியம், பொறியியல், விஞ்ஞானம், சட்டம், கணக்கியல்போன்ற துறைசார் நிபுணர்கள் மேலும்; சர்வதேச அமைப்புகளின் நிர்வாகிகள்,வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பல துறையினரும் நிறைந்துள்ளனர்.
இத்தகையோரது உள்ளங்களை நிறைத்து நிற்கும் உன்னத மனிதம் ஒன்றை சுமந்து நிற்பவர் கலாநிதி .ஆர்.மன்சூர் அவர்கள் என்பதை அறியச் செய்யும் வழிகாட்டியாக மட்டுமன்றி கல்வியால் உயர்வு பெற்று உச்சத்தை தொட்டோரெல்லாம் ஒருமித்த குரலில் ஒருவரைச் சான்றோன் எனச்சொல்வது சாதாரணமானதுமல்ல. அந்த இடத்தைப் பெற்றுக் கொண்டவர் சாமான்யருமல்லர் என்பதையும் விருட்சம் சொல்லி நிற்கிறது.
இத்தகு ஆளுமைகளின் கருத்துக்களைத் தொட்டுச் சென்றாலே விரிவான நூல் உருப்பெற்று விடும். இருந்தாலும் ஒரு சோறு பதம் போல் தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளரும், மெய்யியல் உளவியல் பிரிவைச் சேர்ந்தவருமான .ஜே.எல்.வஸீல் MED, MPhL அவர்களின் கருத்தினை மட்டும் குறிப்பிடுவதன் மூலம் விருட்சத்தின் வெளியீட்டு நோக்கத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.“
இவ்விதழுக்குக் குறிப்புகள் தேடி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்து நூலகம் நுழைந்து ஆய்வு செய்தபோது, அவர் பற்றி கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் எழுதி வெளியிட்ட சஞ்சிகை ஒன்றைத் தவிர வேறெதுவும் கண்டெடுக்க முடியாமல் கவலை அடைந்தேன். எனினும் அல்ஹாஜ் கலாநிதி .ஆர்.மன்சூர் ஏனையோர்களை நிறுவனங்களை வாழ்த்தி எழுதிய வாழ்த்துச் செய்திகள் பலவற்றை என்னால் காணமுடிந்தது. எனினும்,அல்ஹாஜ் கலாநிதி .ஆர்.மன்சூருக்கென்ற தனியான கனதியான நூல் ஒன்று இதுவரை எழுதி வெளியிடாமல் இருந்தபோதிலும் காலம் தாழ்த்தியாவது மருதமுனை மக்கள் செய்யும் இப்பதிவு, முழு இலங்கை முஸ்லிம்களின் கடமையைச் செய்வதாக உணர்கிறேன். அத்தோடு இலங்கை முஸ்லிம் வரலாற்றில் முக்கிய முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் இப்பதிவினூடாக முழு முஸ்லிம் சமூகத்தின் இருப்பும் உறுதிப்படுத்தப்படுவது இப்பதிவின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையின் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் செய்த சமூகப் பணி ஏன் இதுவரை பதியப்படவில்லை என்பது என்னுள் எழுந்த முக்கியமான வினாவாகும். இன்றைய அரசியல்வாதிகள் அரசியலுக்குள் வந்தவுடன் சேவை செய்ய முதலே அவர்களது வரலாறுகளை, குடும்ப வரலாறுகளை நூலுருவாக்கும் இக்காலத்தில் அல்ஹாஜ் கலாநிதி .ஆர்.மன்சூர் சேவை ஏன் நூலுருவாக்கப்படவில்லை என்பதற்கு நான் ஆராய்ந்து கண்ட விடை அவர் புகழையோ, பாராட்டையோ மனிதர்களிடம் இருந்து நேரடியாக எதிர்பார்க்காதவர் என்று தெளிவாகிறது. அந்த வகையில் அவர் வெள்ளைமனம் கொண்டவர் என்பதற்கு இது சான்று பகர்கிறதுஎனத் தனது கருத்து வெளிப்பாட்டைத் தொடர்வதைக் குறிப்பிடலாம்.
எனவே விருட்சம் கலாநிதி .ஆர்.மன்சூர் அவர்களின் சமூகப்பணிக்கான கனதியான தனியான பதிவென்பது தெளிவு.