Tuesday, March 8, 2016

மத்திய மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து அசாத் சாலி இராஜினாமா

மத்திய மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து

அசாத் சாலி இராஜினாமா


மத்திய மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து அசாத் சாலி இராஜினாமா செய்துள்ளார்.
ஜனவரி மாதம் 13ஆம் திகதி தனது இராஜினாமா கடிதத்தை அரசாங்கத்திடம் அசாத் சாலி கையளித்ததுடன் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை முன்னிட்டு, மாகாணசபை செயலாளர் மற்றும் தேர்தல் ஆணையாளரிடமும் தனது இராஜினாமாவை நேரடியாக சென்று கையளித்துள்ளார்.
இந்த இராஜினாமா தொடர்பில் நாளை இடம்பெறும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிப்பதாகவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணிக்கு முன் நின்று செயற்பட்ட அசாத் சாலி, நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்துள்ள  முதலாவது செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment