Friday, April 1, 2016

கொழும்பின் முக்கியமான பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு!

கொழும்பின் முக்கியமான பல பகுதிகளில்

நாளை நீர் வெட்டு!


கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை ஏழு மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீர் வெட்டு நாளை இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணிவரை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நீர்வெட்டு கொட்டாஞ்சேனை, கிரேன்பாஸ், மோதரை மற்றும் மட்டக்குளி போன்ற பகுதிகளிலும், பேஸ்லைன் வீதியின் களனி பாலத்திலிருந்து தெமட்டகொடை சந்தி வரையிலும் உள்ள நீர்வழிப் பாதைகள் மற்றும் இதனோடு தொடர்புடைய அனைத்து பகுதிகளிலும் நீர் வெட்டு காணப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக் காலமாக ஏற்பட்ட அதிக வெப்பத்தினால் நாட்டில் நீர்த்தேவை அதிகமாக காணப்பட்டது. இதற்கான தீர்வுகளை ஏற்படுத்தும் வகையிலேயே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தபட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment