Monday, May 2, 2016

கிழக்கு மாகாண பாடசாலைகள் இன்றிலிருந்து நண்பகல் 12 மணியுடன் மூடப்படும்!

கிழக்கு மாகாண பாடசாலைகள்
இன்று நண்பகல் 12 மணியுடன் மூடப்படும்!


வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி..நிஸாமிடம், மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி பணித்துள்ளார்.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில்  நேற்று திங்கட்கிழமை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் நடைபெற்ற கல்வி அபிவிருத்திக் கூட்டத்தின் போது மாகாண அமைச்சர் இதனைக் கூறினார்.

தற்போது நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கையும் பாதிக்கப்படுகின்றது. மாணவர்கள் வகுப்பறைகளிலிருந்து கற்றலை மேற்கொள்ள முடியாத நிலைமை உள்ளது. இந்நிலையில், மாணவர்களின் நன்மை கருதி இதனை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment