Tuesday, May 31, 2016

ஆளுனர் பதவியிலிருந்து என்னை நீக்க முதலமைச்சரினால் ஒரு போதும் முடியாது! – ஆளுனர் ஒஸ்டின் பெர்னான்டோ

ஆளுனர் பதவியிலிருந்து என்னை நீக்க
முதலமைச்சரினால் ஒரு போதும் முடியாது!

– ஆளுனர் ஒஸ்டின் பெர்னான்டோ


என்னை ஆளுனர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முதலமைச்சரினால் முடியாது என கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து  மேலும் தெரிவிக்கையில்,
மாகாண ஆளுனர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கு, மாகாண முதலமச்சர் ஸீர்  அஹமட்டிற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. என்னைப் பற்றி என்னைவிட அதிகாரம் குறைந்தவர்களினால் தீர்மானம் எடுக்க முடியாது.
ஆளுனர் பதவிக்கு மேல் அதிகாரம் படைத்த ஜனாதிபதியே இது குறித்து தீர்மானிக்க வேண்டும்.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் உண்டு.எனினும் குற்றச்சாட்டுக்களை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

.

No comments:

Post a Comment