Sunday, June 26, 2016

ஜப்பான் நரிடா விமான நிலையத்தில் உடற்சோதனைக்குள்ளான மஹிந்த

ஜப்பான் நரிடா விமான நிலையத்தில்
உடற்சோதனைக்குள்ளான மஹிந்த

ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ஹிந்த ராஜபக்வுக்கு, நரிடா விமான நிலையத்தில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 நாள் பயணமாக ஜப்பான் சென்றிருந்த  மஹிந்த ராஜபக்ஸ கொழும்பு திரும்புவதற்காக ரோக்கியோவின் நரிடா விமான நிலையத்துக்குச் சென்ற போது, இரண்டாவது முனையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி குண்டுகள் மற்றும் உலோகப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு உடல் பரிசோதனையை மேற்கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஸ ஜப்பானுக்கான தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ளும் போது, இராஜதந்திர நெறிமுறை உதவிகளை இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கோரியிருந்தார்.
எனினும், வெளிவிவகார அமைச்சு அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னர், பிரதமராக இருந்த ரட்ணசிறி விக்கிரமநாயக்க மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்கு ஜப்பான் சென்றிருந்த போதும் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment