Wednesday, June 29, 2016

துருக்கி விமான நிலையத்தில் தாக்குதல்

துருக்கி விமான நிலையத்தில் தாக்குதல்

துருக்கி விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே அமைந்துள்ள Ataturk விமான நிலையத்தில் திடீரென்று இரண்டு இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.
இதில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 140 க்கும் மேற்பட்டவர்கள் இதில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பல பேர் இந்த தாக்குதல் சம்பவத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகமாகலாம் என கூறப்படுகிறது.
மேலும் கார் நிறுத்தும் இடத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயுததாரிகளான 4 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் இருக்கும் மிகப்பெரிய விமான நிலையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.




















No comments:

Post a Comment