Sunday, June 26, 2016

இன்று இடம்பெறும் மாவடிப்பள்ளி மத்திய குழுவின் மாபெரும் இப்தார் நிகழ்வு

இன்று இடம்பெறும் மாவடிப்பள்ளி மத்திய குழுவின்

மாபெரும் இப்தார் நிகழ்வு 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவடிப்பள்ளி  மத்திய குழுவினால் இன்று 2016.06.26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு மாவடிப்பள்ளி கலாச்சார மண்டபத்தில் மாபெரும் இப்தார் நிகழ்வு .ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவடிப்பள்ளி  மத்திய குழு தலைவர் எம்.எம்.ஏ.றஸ்ஸாக் (ஜெமீல்) தலைமையில் இடம்பெறும்  இந்த இப்தார் நிகழ்வில்  தென்கிழக்கு பல்கலைக்கழக் முன்னாள் உப வேந்தரும் லக்சல கூட்டுத்தாபனத்தின் தலைவருமான எஸ்.எம்.எம்.இஸ்மாயில், கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ அப்துல் மஜீட் (எஸ்.எஸ்.பி), அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் அல்ஹாபீழ் ஏ.ஏ.எம் அஸாம் (JP) ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கல்ந்து கொள்ளவுள்ளனர்.

இவர்களுடன் இந்நிகழ்வில் மேலும் பல முக்கியஸ்த்தர்கள் கலந்து சிறப்பிக்கவூள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. 


No comments:

Post a Comment