Sunday, July 3, 2016

ஈராக் கார் குண்டு வெடிப்பு 80 பேர் பலி 130க்கும் மேற்பட்டோர் காயம் ஐ.எஸ்.பொறுப்பேற்பு

ஈராக் கார் குண்டு வெடிப்பு

80 பேர் பலி  130க்கும் மேற்பட்டோர் காயம்
ஐ.எஸ்.பொறுப்பேற்பு

ஈராக்கில் நடந்த 2 பயங்கரவாத தாக்குதலில் 88 பேர் பலியாயினர். 130க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த தாக்குதலுக்கு .எஸ்., பொறுப்பேற்றுள்ளது.
ரமழான் நோன்பு அனுஷ்டிக்கப்பட்டு வரும் வேளையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதுவும் குறிப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான பாக்தாத் ,காரட் ஆகிய இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
 காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் ரமழான் நோன்புப் பெருநாளைக் கொண்டாட்ட ஏற்பாட்டிற்கான பொருட்கள் வாங்குவதற்காக வீதியில் அதிகம் கூடியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்ர்.

முதலில் 12 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது பலி எண்ணிக்கை 80 தொட்டுள்ளது. மேலும் பலத்த காயத்துடன் 130 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.








No comments:

Post a Comment