Sunday, July 31, 2016

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம் இன்று தேசிய ரீதியில் ஆரம்பம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்

வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம்
இன்று  தேசிய  ரீதியில் ஆரம்பம்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நடைமுறைப்படுத்தும்வீட்டுக்கு வீடு மரம்செயற்திட்டம், முஸ்லிம்களின் தனித்துவஅரசியலுக்காக தன் உயிரையே தியாகம் செய்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர், அக்கரைப்பற்றைச் சேர்ந்த மர்ஹூம் அலி உதுமானின் நினைவு நாளான ஆகஸ்ட் 01 ஆம் திகதி, நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திருகோணமலை மாவட்டம் கந்தளாயில் இன்று ஆகஸ்ட் 1ஆம் திகதி வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டத்தை ஆரம்பித்து வைக்கின்றார்.  

இச்செயற்திட்டத்தின் மூலம் மரம் நடப்படும் குறித்த வீட்டின் குடும்பத்தினருடன் கட்சி நெருக்கமான உறவைப பேணுதல், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை கட்சியின் நடவடிக்கைக்கு தொடர்சியாக இயங்கச் செய்தல், இளைஞர் அணி செயலமர்வுகளுக்கு மரம் நடப்பட்ட குடும்பத்திலுள்ள இளைஞர்களை உள்ளீர்த்தல், கட்சியின் தொழில் வாய்ப்புக்கள் மற்றும் அக்குடும்பத்தினருக்கான உதவி வழங்குதல், கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுதல் குடிசை கைத்தொழிலுக்கு வழிசமைத்தல் என்பன போன்றவற்றின் மூலம் பிரதேச பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுடன் கட்சியை ஆழ விதைத்தல் போன்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது


முஸ்லிம் இராணுவ வீரரின் பெற்றோரை கிண்டலடித்ததால் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்

முஸ்லிம் இராணுவ வீரரின் பெற்றோரை
கிண்டலடித்ததால் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், உயிரிழந்த அமெரிக்க முஸ்லிம் ராணுவ வீரரின் பெற்றோரை, கிண்டல் செய்த சம்பவம், சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக, ஈராக் போரில் பலியான அமெரிக்க முஸ்லிம் ராணுவ வீரர், ஹுமாயுனின் தந்தை பிரசாரம் செய்தார்.
அப்போது, முஸ்லிம்களுக்கு எதிராக பேசி வரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டிரம்புக்கு கண்டனம் தெரிவித்த அவர், 'போர் தியாகிகளின் கல்லறைக்கு, டிரம்ப் செல்ல வேண்டும்; அப்போது தான், அமெரிக்கா எத்தகைய பன்முகத்தன்மை கொண்ட தியாகத்தால் உருவானது என்பது புரியும்' என்றார். இந்த உரை, அமெரிக்கர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதற்கு பதிலளித்துள்ள டிரம்ப், ராணுவ வீரர் ஹுமாயுனின் பெற்றோரை கிண்டல் செய்துள்ளார். 'ஹுமாயுனின் தந்தை ஆற்றிய உரையை எழுதிக்கொடுத்தது யார், ஹிலாரியா? ஹுமாயுனின் தந்தை மட்டுமே பேசினார். அவரது மனைவி அமைதியாக இருந்தது ஏன்? பேச அனுமதிக்கப்படவில்லையா' என்று கிண்டலாக கேட்டார்.

டிரம்பின் இந்த பதிலை, இரு கட்சியினருமே ரசிக்கவில்லை. அவருக்கு, சமூக வலைதளங்கள் மூலமாகவும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, டிரம்ப் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், 'ராணுவ வீரர் ஹுமாயுன், கதாநாயகர்' என்று கூறியுள்ளார்.

பிரான்ஸில்வி ஷேட ஆராதணை அனுதாபத்தைக் காட்டும் வகையில் முஸ்லிம்களும் பங்கேற்பு

பிரான்ஸில் கத்தோலிக்க பாதிரியார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில்

விஷேட ஆராதணை அனுதாபத்தைக் காட்டும் வகையில்

முஸ்லிம்களும் பங்கேற்பு

பிரான்ஸில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நடத்தப்பட்ட கத்தோலிக்க ஆதாரணையில் தமது அனுதாபத்தைக் காட்டும் வகையில் முஸ்லிம்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் குறித்த தேவாலயத்தின் மூத்த பாதிரியார் கொடூரமான முறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.
.எஸ் .எஸ் தீவிரவாதிகளினால் ருயின் பகுதியில் உள்ள தேவாலயத்தில் புகுந்த தீவிரவாதிகள் பணய கைதிகளாக பிடித்து வைத்திருந்த மூத்த பாதிரியாரை படுகொலை செய்தனர்.

இந்நிலையில் இதனை கண்டிக்கவும் பிரான்ஸின் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவை வழங்கும் வகையிலும் பாதிரியாருக்கான கத்தோலிக்க ஆராதனையில் பங்கேற்கவேண்டும் என பிரான்ஸின் முஸ்லிம் பேரவை கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களும் ஆராதணைகளில் பங்கேற்று தமது அனுதாபங்களை வெளிக்காட்டியுள்ளனர்.






கழுத்து நிறைய மாலைகளுடன் டாம்பிகமாக படத்திற்கு முகம் கொடுத்திருக்கும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள்

கழுத்து நிறைய மாலைகளுடன்

டாம்பிகமாக படத்திற்கு முகம் கொடுத்திருக்கும்

முஸ்லிம்  மக்கள் பிரதிநிதிகள்


புல்மோட்டை தள வைத்தியசாலையில் தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில்  கலந்து கொண்ட முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளில் சிலர் கழுத்து நிறைய மாலைகளை அணிந்து கொண்டு  தமிழக அரசியல்வாதிகளையும்  விட அதற்கும் மேல் ஒரு படியாக கால்சட்டை பைக்குள் கையை ஸ்டைலாக வைத்துக் கொண்டும் டாம்பிகமாக படத்திற்கு முகம் கொடுத்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 
இது மக்களின் கருத்தாகும்





சாய்ந்தமருது குவாஷி நீதிமன்றக் கட்டடம் பூர்த்தியாகியும் திறந்து வைக்கப்படாத நிலையில்


சாய்ந்தமருது குவாஷி நீதிமன்றக் கட்டடம் பூர்த்தியாகியும்

திறந்து வைக்கப்படாத நிலையில்

பொலிவேரியன் குடியேற்றக் கிராமத்தில் நிர்மானிக்க்ப்பட்டு வந்த சாய்ந்தமருது கரைவாகு தெற்குப்  பிரிவுக்கான குவாஷி நீதிமன்றக் கட்டடம் பூர்த்தியாகிய நிலையில் இதுவரையும் இக்கட்டடம் திறந்து வைக்கப்படாமல் இருந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
குவாஷி நீதிமன்றக் கட்டடம் பூர்த்தியாகியுள்ள போதிலும் இக்கட்டடத்திற்கு மின்சார வசதி, குடிநீர் வசதி எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என கட்டடம்  திறக்கப்படாமைக்கான காரணம் தெரிவிக்கப்படுகின்றது.
இதுமாத்திரமல்லாமல் குவாஷி நீதிமன்றக் கட்டடத்தைச் சுற்றிவர எந்த பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 60 இலட்சம் ரூபா செலவில் சாய்ந்தமருது, கரைவாகு தெற்குப்  பிரிவுக்கான குவாஷி நீதிமன்றக் கட்டடம் நிர்மானிக்க்ப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சாய்ந்தமருது கரைவாகு தெற்குப்  பிரிவுக்கான குவாஷி நீதிமன்றத்தின் நீதிபதியாக டாக்டர் .எம். ஷெரிப் (ஜே.பி) அவர்கள் கடமை செய்து வருகின்றார்கள்.

நடைபாதையை ஏன் ஆக்கிரமித்தீர்கள்? எருமை மாட்டை பேட்டி எடுக்கும் பாகிஸ்தான் நிருபர்

நடைபாதையை ஏன் ஆக்கிரமித்தீர்கள்?

எருமை மாட்டை பேட்டி எடுக்கும் பாகிஸ்தான் நிருபர்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் வீதிகளைக் கடக்கும் போது கடைப்பிடிக்கும் ஒழுங்ங்குகளை மதிக்காத மனிதர்களைப் பற்றி அங்கிருந்த எருமை மாட்டிடம் பாகிஸ்தானின் பிரபல ஜியோ தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் அமின் ஹபீஸ் என்பவர் கருத்து கேட்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. எருமை மாட்டிடம் கருத்து கேட்பதோடு மட்டுமின்றி எருமை மாட்டின் குரலோசையை இவர் மொழிபெயர்க்கும் அழகும் பலரை கவர்ந்துள்ளது
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள மக்கள் சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடிப்பதில்லை. முக்கியமான  அதிவேக பாதைகளை கடந்து செல்ல மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தும் பெரும்பாலும் இங்குள்ளவர்கள் இரு சாலைகளுக்கு இடையிலான உயரமான தடுப்பு சுவர்களை தாண்டிச் சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலைகளை கடக்கின்றனராம்.
இங்கு வாழும் ஐந்தறிவுள்ள மாடுகள்கூட மேம்பாலங்களுக்கு செல்லும் படிகட்டுகளில் சாவகாசமாக ஏறியும், இறங்கியும் சென்று பாதைகளை கடக்கும்போது ஆறறிவு கொண்ட மனிதர்கள் சற்று சிரமத்தை தவிர்ப்பதற்காக இப்படி உயிருக்கு ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனராம்.
ஆனால், பாலங்களின் படிக்கட்டுகளில் மாடுகள் போவதால்தான் நாங்கள் பாலங்களை பயன்படுவதில்லை என ஒருதரப்பினர் கூறுகின்றனராம்.
இதுதொடர்பான ஒரு செய்தி தொகுப்புக்காக பாகிஸ்தானின் பிரபல ஜியோ தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் அமின் ஹபீஸ் என்பவர்ம் வீடியோ கேமரா மேனுடன் படப்பதிவில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, பாதை ஒழுங்குகளை மதிக்காத மனிதர்களைப் பற்றி அங்கிருந்த எருமை மாட்டிடம் அவர் கருத்து கேட்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. கருத்து கேட்பதோடு மட்டுமின்றி எருமை மாட்டின் குரலோசையை இவர் மொழிபெயர்க்கும் அழகு பலரை கவர்ந்துள்ளது.

துருக்கியில் 17 பத்திரிகையாளர்கள் கைது! காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

துருக்கியில் 17 பத்திரிகையாளர்கள் கைது!
காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதக் குழுவில் உறுப்பினர்களாக இருந்த குற்றச்சாட்டு தொடர்பாக பத்திரிகையாளர்கள் 17 பேரை காவலில் வைக்க இஸ்தான்புல் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்காவில் வசித்து வரும் மதபோதகர் ஃபெதுல்லா குலென் பின்புலமாக இருந்ததாக ஜனாதிபதி ஆதுர்கான் கூறி வருகிறார். இதையடுத்து, குலெனின் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்ததாக 21 பத்திரிகையாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு இஸ்தான்புல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 4 பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட்டனர். மூத்த பத்திரிகையாளர் நஸ்லி இலிசாக் ட்பட 17 பேர், வழக்கு விசாரணையை சந்திக்கும் வகையில் காவலில் வைக்க இஸ்தான்புல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பிறகு, ராணுவம், கல்வித்துறை, நீதித் துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதில், பெரும்பாலானோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை.









Saturday, July 30, 2016

உலகை ஆளும் பெண்கள்

உலகை ஆளும் பெண்கள்



உலகின் வல்லரசு நாடா அமெரிக்காவின்  ஜனாதிபதி வேட்பாளராக பெண் ஒருவர் (ஹிலாரி கிளிண்டன்) முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியா இருமுறை பதவிவகித்த பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன். இவர் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார். ஹிலாரி தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதியானால் அந்நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.
இதற்குமுன் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியா பெண்கள் இருந்துள்ளனர். தற்போதும் சில் நாடுகளில் பெண்கள் தான் ஆட்சி செய்து வருகின்றனர். பிரிட்டன், ஜெர்மனி நார்வே உள்ளிட்ட சில் நாடுகளின் ஜனாதிபதி மற்றும் பிரதமராக பெண்கள் பதவிவகித்து வருகின்றனர். அதுவும் அதிகாரமிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை அவர்கள் வகிக்கின்றனர்.

பெண் ஜனாதிபதிகள்

இந்நாடுகளில் ஜனாதிபதிக்கு தான் அதிக அதிகாரம்
ஏஞ்சலா மெர்கெல் - ஜெர்மனி
தில்மா ரூல்செப் - பிரேசில்
மிச்செல் பேச்லெட் - சிலி
எலென் ஜான்சஜ் சிர்லெப் - லைபிரியா
ஹில்டா ெஹய்னி - ஐஸ்லாந்து
டிசாய் லிங் வென் - தைவான்
டலியா கிரிபஸ்கைட் - லித்துவேனியா
இந்நாடுகளில் ஜனாதிபக்கு அதிகாரம் குறைவு தான், இங்கு இந்தியாவைப்போல பிரதமருக்கு தான் முழு அதிகாரம் உள்ளது.
டோரிஸ் புரஸ் - ஆஸ்திரியா
மேரி லூசி - மால்டா
அமினாஹ் குரிப் - மொரிசீயஸ்
பார்க் ஜியுன் ஹியு - தென்கொரியா
பித்யா தேவி பண்டாரி - நேபாளம்
கொலின்டா கிராபர் கிடரோவி - குரோசியா

பெண் பிரதமர்கள்
இந்நாடுகளில் பிரதமருக்கு தான் அதிகாரம் அதிகம்
தெரசா மே - பிரிட்டன்
சாரா குகன்ஜெல்வா - நமீபியா
ேஷக் ஹசீனா - வங்கதேசம்
பீட்டா ஜிட்லோ - போலந்து
எர்னா சோலபெர்க்நார்வே