Friday, July 1, 2016

கல்முனை வைத்திய சங்கம் உதயம்

கல்முனை வைத்திய சங்கம் உதயம்


கல்முனை சுகாதாரப் பிராந்தியத்திற்குள் செயலாற்றும் வைத்திய அதிகாரிகள், பொது வைத்தியர்கள் மற்றும் பல் வைத்தியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கல்முனை வைத்திய சங்கம் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
1990 களில் மிகச் சிறப்பாக செயற்பட்டு பல சேவைகளாற்றிய இச் சங்கம் நீண்ட கால இடைவெளியின் பின் மீண்டும் வைத்தியர்கள் மத்தியில் நற்பண்புகளையும் பரந்த அறிவையும் வளர்ப்பதற்காகவும் சமூக நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபடவும் தயாராகின்றது.
இதன் முதலாவது கூட்டம் அண்மையில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடை பெற்ற போது பல வைத்தியர்கள் கலந்து கொண்டனர்.

செயற் குழு உறுப்பினர்கள் விபரம்:- தலைவர்: டாக்டர் .எல்.பாறுக்;,உப தலைவர்: டாக்டர்; எம்.எஸ் ஜெசீலுல் இலாஹி, செயலாளர்: டாக்டர் எம்..எம்.ஜெமீல், திட்டப் பணிப்பாளர்;: டாக்டர்: எம்.சீ.எம்.மாஹிர், பொருளாளர் டாக்டர்; .எல்.எம்.மிஹ்லார்;, சஞ்சிகை ஆசிரியர்; டாக்டர் என். றமேஸ், உப-பணிப்பாளர்: டாக்டர் எம்.எச். றிஸ்பின், உப-செயலாளா: டாக்டர்; (திருமதி) பீ. லோகநாதன்; உப-பொருளாளர்: டாக்டர்.எம். ஜாபிர்.

No comments:

Post a Comment